என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amount of deduction"

    • முன்னாள் எம்.பி. துரை வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வந்தவாசி:

    வந்தவாசியில், வந்தவாசி கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் 89-வது பொதுப் பேரவைக் கூட்டம் தலைவர் டி.வி.பச்சையப்பன், துணைத்தலைவர் அன்னை.க.சீனுவாசன் தலைமையில் நடைபெற்றது.

    திருவண்ணாமலை மண்டல இணைப்பதிவாளர் கோ.நடராஜன், செய்யாறு சரக துணைப்பதிவாளர் மு.கமலக் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலாண்மை இயக்குநர் ப.மூர்த்தி ஆண்டறிக்கை வாசித்தார். வங்கி செயலாளர் ஏ.சீனுவாசன் அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மு.துரை கலந்து கொண்டு பேசினார்.

    பின்னர் அங்கத்தினர்கள் 12 ஆயிரத்து 597 பேருக்கு 10 லட்சத்து 55 ஆயிரத்து 478 ரூபாய் ஈவுத் தொகைகளை வழங்கினார்.

    இந்த பேரவை விழாவில், நகர்மன்ற தலைவர் எச்சலால், நகர திமுக செயலாளர் எ.தயாளன், நகர திமுக அவைத் தலைவர் அ.நவாப்ஜான், திமுக இளைஞர் அணி இ.எஸ்.டி.கார்த்திக், ,தெள்ளாறு ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் கமலாட்சி இளங்கோவன், ஒன்றிய திமுக செயலாளர்கள் சி.ஆர் பெருமாள், டி.டி ராதா, கே.ஆர்.பி.பழனி, கே.டி.ராமசாமி, முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர்கள் டிகேபி மணி, அர்ஜீனன், பாஸ்கர் ரெட்டியார், மத்திய தொலைத் தொடர்பு ஆலோசனை குழு உறுப்பினர் வி.பி.அண்ணாமலை, ஓட்டல் பாஷா, நகர மன்ற உறுப்பினர் நாகூர் மீரான், சங்க நிர்வாகக்குழு உறுப்பி னர்கள் எ.ராஜேஷ்குமார், கே.நடராஜன், டி.தீபா, டி.வி.நித்தியா,வி தீபா, பி.மணி, கே.சக்திவேல், மற்றும் வங்கி பணியாளர்களான, சிறப்பு நிலை மேற் பார்வையாளர்கள் ஆர்.ராஜேஸ்வரி, எம்.முனியாண்டி, யுவராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக, சிறப்புநிலை மேற்பார்வையாளர் எஸ்.காந்தி நன்றி கூறினார்.

    ×