என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ambulance was informed but ambulance did not come due to breakdown"

    • உடலை ஒப்படைக்க பொதுமக்கள் மறுப்பு
    • உதவி கலெக்டர் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்த பீஞ்ச மந்தை சின்ன எட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் குள்ளையன் (வயது 28) இவரது மனைவி காஞ்சனா வயது (22).கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. காஞ்சனா நிறை மாத கர்பிணியாக இருந்தார்.

    அதற்காக எலந்தம்புதூர் மலை கிராமத்தில் உள்ள தாய் வீட்டில் தங்கியிருந்தார்.

    அவருக்கு நேற்று முன்தினம் அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது. கணவர் வெளியூருக்கு கூலி வேலைக்கு சென்று இருந்தால் அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஒரு மாதத்திற்கு முன்பே ஆம்புலன்ஸ் பழுதானதால் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் உறவினர்கள் பிரசவ வலியால் துடித்த காஞ்சனாவை பைக்கில் அமரவைத்து ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.

    சரியான சாலை வசதி இல்லாததால் அவசரமாக செல்ல முடியவில்லை. இதனால் வழியால் துடித்த காஞ்சனாவுக்கு வழியிலேயே ஆண் குழந்தை இறந்தே பிறந்தது. பின்னர் காஞ்சனாவுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவரும் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்த வட்டார மருத்துவ அலுவலர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் இறந்த காஞ்சனா உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர்.

    ஆனால் பொதுமக்கள் அவரது உடலை தர மறுத்தனர்.சம்பவ இடத்திற்கு உதவி கலெக்டர் பூங்கொடி மற்றும் தாசில்தார் நேரடியாக சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காஞ்சனா பிரசவ வலியால் இயற்கையாக இறந்தார். சாலை வசதி இருந்திருந்தால் அவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருப்போம். உடனடியாக சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து காஞ்சனாவின் உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து உதவி கலெக்டர் பூங்கொடி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பீஞ்சமந்தை எட்டிப்பட்டி மலைப்பகுதியில் சாலை அமைப்பது குறித்து ஆய்வு செய்தனர். விரைவில் அந்த பகுதியில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    ×