என் மலர்
நீங்கள் தேடியது "Amavasaivazhipaadu"
- அங்கு அவருக்கு தூப தீப ஆராதனைகள் மிகவும் விமர்சையாக நடைபெறும்.
- அந்த ஆராதனை முடிந்த பிறகு அவர் ஆலயத்துக்குள் செல்வார்.
பவுர்ணமி போன்றே அமாவாசை தினத்தன்றும் இரண்டாம் கால பூஜையின்போது உற்சவர் சந்திரசேகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்வார்கள்.
நான்காவது பிரகாரத்தில் தென்மேற்கு திசையில் அமைந்துள்ள அமாவாசை மண்டபத்தில் சந்திரசேகரை எழுந்தருள செய்வார்கள்.
அங்கு அவருக்கு தூப தீப ஆராதனைகள் மிகவும் விமர்சையாக நடைபெறும்.
அந்த ஆராதனை முடிந்த பிறகு அவர் ஆலயத்துக்குள் செல்வார்.
அமாவாசை தோறும் நடைபெறும் இந்த சிறப்பு பூஜையை காண ஏராளமானோர் அமாவாசை மண்டபத்தில் திரள்வது உண்டு.
இந்த பூஜையை நேரில் கண்டால் பித்ருக்களை வழிபட்டதற்கு சமமாக கருதப்படுகிறது.
எனவே மறைந்த முன்னோர்களின் ஆசியை பெற விரும்புபவர்கள் இந்த அமாவாசை பஞ்ச பருவ பூஜையை தவற விடுவதில்லை.
இறையருள் மட்டுமின்றி பித்ருக்களின் ஆசியையும் பெற்று தரும் அமாவாசை பருவ பூஜையை மற்ற தலங்களில் காண இயலாது.






