search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alternative Party"

    • மாவட்ட தி.மு.க மாவட்ட செயலாளருமாகிய செஞ்சி மஸ்தான் தலைமையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
    • புதியதாக சேர்ந்தவர்கள் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு மலர் கொத்துக் கொடுத்தும், சால்வை அறிவித்தும் தங்களை தி.மு.க-வில் இணைத்துக் கொண்டனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் தனியார் மஹாலில் மரக்காணம் மேற்கு ஒன்றியம் கீழ் எடையாளம் ஊராட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து விலகி சிவரஞ்சனி பாலகிருஷ்ணன் தலைமையில் சிறுபான்மை பிரிவு நலன் அமைச்சரும், விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க மாவட்ட செயலாளருமாகிய செஞ்சி மஸ்தான் தலைமையில் தி.மு.க.வில் இணைந்தனர். அப்பொழுது கட்சியில் புதியதாக சேர்ந்தவர்கள் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு மலர் கொத்துக் கொடுத்தும், சால்வை அறிவித்தும் தங்களை தி.மு.க-வில் இணைத்துக் கொண்டனர்.

    இதனைத்தொடர்ந்து கட்சியில் புதியதாக சேர்ந்த அனைவருக்கும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தி.மு.க கட்சியின் துண்டு அணிவித்து அவர்களை திமுகவில் இணைத்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மரக்காணம் மேற்கு ஒன்றிய கழக செயலாளரும், மறுக்காணம் ஒன்றியக் குழு துணைப் பெருந் தலைவருமாகிய பழனி ,ஒன்றிய அவைத்தலைவர் குமார். ஒன்றிய துணை செயலாளர்கள் சரவணன், மீனாகுமாரி, மாவட்ட பிரதிநிதிகள் தேவதாஸ், ராமமூர்த்தி, மாவட்ட நிர்வாகி திருமலை உள்ளிட்ட ஏராளமானோர்  கலந்து கொண்டனர்,

    ×