search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AGRICULTURAL COLLEGES"

    • வேப்பந்தட்டையில் வேளாண் கல்லூரி அமைக்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தப்பட்டது.
    • பள்ளி கல்லூரி நேரத்தில் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும்.

    பெரம்பலூர்:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வேப்பந்தட்டை வட்ட மாநாடு, வேப்பந்தட்டை காந்தி மகாலில் நடைபெற்றது. மாநாட்டுக்கு அச்சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் கோவிந்தன் தலைமை வகித்தார். வட்ட தலைவர் சாமிரை, செயலாளர் ராமச்சந்திரன், துணை தலைவர் செங்கமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செல்லதுரை கோரிக்கைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார்.

    பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சின்னமுட்லு நீர்தேக்க திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். வேப்பந்தட்டை பகுதியில் தமிழ்நாடு அரசு வேளாண்மை கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடை பராமரிப்புக்கு மானிய விலையில் தீவனம் வழங்கி பால் உற்பத்தியாளர்களுககு கறவை மாடு கடன் வழங்க வேண்டும்.

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வெள்ளுவாடி கிராமத்தில் உள்ள மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு சென்றுவரை வசதியாக பள்ளி கல்லூரி நேரத்தில் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும்.

    மதிப்புக்கூட்டப்பட்ட உணவுப் பொருள் தயாரிக்க வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு கடன் வசதிகள் வழங்கி விவசாயிகள வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். கால்நடைகளுக்கு கோமாரி நோய் மற்றும் அம்மைநோய் தடுப்பூசி உரிய காலத்தில் போடுவதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×