search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agnikulam"

    • ஆடி வெள்ளி மற்றும் ஆடி அமாவாசை அன்று அம்மனுக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்படும்.
    • ஆடி மாதத்தன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும்.

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

    ஆண்டு தோறும் ஆடி மாதத்தன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விடும். உடனடியாக அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்படும். பிறகு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும்.

    ஆடி வெள்ளி மற்றும் ஆடி அமாவாசை தினத்தன்று அம்மனுக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்படும். அந்த அலங்காரத்தில் அம்மனை வழிபடுவது கண்கொள்ளா காட்சி யாக இருக்கும்.

    முன்பெல்லாம் வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் நடை அடைக்கப்பட்டு விடுவது உண்டு. ஆனால் ஆடி மாதம் பக்தர்கள் வருகை ஆண்டு தோறும் அதிகரித்தபடி உள்ளது. இதன் காரணமாக மேல்மலையனூர் மேல்தலத்தில் பகலில் நடைசாத்தப்படுவது இல்லை.

    எனவே பக்தர்கள் நாள் முழுக்க அங்காளம்மனை தரிசனம் செய்ய முடிகிறது. நீண்ட தூரத்தில் இருந்து வரும் பக்தர்களுக்கு இது வசதியாக உள்ளது. இரவு 9 மணி வரை கோவில் திறந்து இருக்கும்.

    அமாவாசை அன்று இரவு முழுவதும் கோவில் திறந்து இருக்கும். ஊஞ்சலில் உற்சவரை காணும் மக்களில் பலர் கருவறை அம்மனையும் வழிபட்டு செல்கிறார்கள்.

    அங்காளம்மனை அமைதிப்படுத்தும் நிகழ்வு ஆதிகாலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. ஆனால் ஊஞ்சலில் அம்மனை வைத்து தாலாட்டுவதை பக்தர்கள் பார்த்து தரிசனம் செய்யும் நடைமுறை வழக்கம் சுமார் 28 ஆண்டுக்கு முன்புதான் தோன்றியது. மிக குறுகிய காலத்துக்குள் இது பக்தர்கள் மத்தியில் இடம் பிடித்து உள்ளது.

    அங்காளம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கும் போது சில பக்தர்கள் ஆர்வ மிகுதியால் தேங்காய், எலுமிச்சை, பழத்தில் சூடம் ஏற்றி வழிபடுகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது என்று கோவில் நிர்வாகம் எச்சரித்து உள்ளது.

    லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இடத்தில் இத்தகைய வழிபாட்டை, பக்தர்கள் தவிர்ப்பது நல்லது என்று கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    • மேல்மலையனூரில் மட்டுமே ஆதி திருவிழா கொண்டாடப்படுகிறது.
    • கந்தாயத்தின் கடைசி மாதம் மாசி மாதம் அமாவாசையாகும்.

    கந்தாயத்தின் கடைசி மாதம் மாசி மாதம் அமாவாசையாகும். அன்றுதான் சித்த பிரம்மை பிடித்த சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் விலகிய நாள். அன்றுதான் அங்காளி என்ற பூங்காவனத்தாள் அங்காளம்மனாக ஆனாள்.

    சிவசுயம்பு புற்றுருவாகவும், புற்றுக்குள் குடி கொண்ட நாக வடிவமாகவும் ஆனாள் என்று அறிந்த வண்ணம் நாகத்தின் படம் சுருங்காமல் சீறிபாயும் நிலையில் இருந்ததாகவும், இந்த நிகழ்வுகளை கண்ணுற்ற, பூலோகத்தில் இருந்த பூதகணங்களான, ஆண்பூதம், பெண்பூதம், மிருக கணங்கள், பறவை கணங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்த வண்ணம் வகை வகையாக வந்து அப்புற்றை சுற்றி பணிந்து தொழுததாக ஐதீகம்.

    அதற்கும் அந்த நாகப்பாம்பு படம் சுருங்காமல் இருப்பதை கண்ட பூலோக கணங்களில் வேண்டுகோளுக்கு இணங்க தேவர் உலக தேவர்கள் தங்களின் வாகனமான ஐராவதம் என்ற வெள்ளை யானையில் பூலோகமான இப்புற்றை வந்து தொழுது நின்றதாகவும், அதற்கும் இந்த நாகப்பாம்பின் படம் சுருங்காமல் இருப்பதைக் கண்ட தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த வகையில் தேவர்களின் திருவுருவமாக "திருத் தேர் ஆகி" நின்ற அப்புற்றை சுற்றி வரும் போது கலியுகம் பிறந்ததாக அறிந்த வண்ணம் கலியுகத்தில் அந்த பாம்பு படம் சுருங்கி புற்றுக்குள் சென்று மறைந்ததாகவும் அறியப்பட்டுள்ளது.

    இந்த வரலாற்று நிகழ்வுகளை ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூறவே எழுந்த நிலைகளே திருவிழாக்கள் ஆகும்.

    மாசி மாதம் சிவபெருமான் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு வந்து இரவு தங்கியதால், அன்றைய இரவு சிவன் ராத்திரி என்றும், அன்று இரவில் கரம் என்ற சக்தி கரக திருவிழாவாகவும், மறுநாள் பூரண அமாவாசை தினத்தில் அங்காளி ஆவிகளுக்கும், ஆன்மாக்களுக்கும் பொதுவில் சூறையிடும் நாள், இதையே மயானக்கொள்ளை என்றும் அன்று தான் அங்காளி அங்காளம்மனாக ஆனாள்.

    ஆண்பூத கணங்கள் புற்றை சுற்றி பணிந்தன என்று அறிந்த வண்ணம், இரவில் ஆண்பூத வாகனத்தில் அம்மன் பவனி என்றும், மூன்றாம் நாள் பெண்பூதவாகனத்தில் அம்மன் பவனி என்றும், நான்காம் நாள், காட்டில் இருக்கும் மிருகத்தின் தலைவன் சிங்க வாகனத்தில் அம்மன் பவனி என்றும், ஐந்தாம் நாள் வாகனத்தில் இருந்த பறவை கணங்கள் தன்னுடைய தலைவனான அன்னத்தை வாகனமாக ஏற்று அன்ன வாகனத்தில் அம்மன் பவனி என்றும், அன்றைய பகல் திருவிழாவாக கோபம், சினம், சீற்றம், ஆங்காரம், ஆவேசம் என்ற நிலையில் உச்ச கட்டமாக கருதி "தீமிதி" திருவிழாவாகவும் நடக்கிறது.

    ஆறாம் நாள் உலகின் ஐராவத்தில் இருந்து தேவர்கள் வந்தனர் என்றும் அவர்களின் வாகனமான ஐராவதத்தில் அம்மன் பவனி என்றும், ஏழாம் நாள் தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த வகையில் தேவர்களின் உருவமான திருத்தேர் வடிவமாகி நின்று புற்றை சுற்றி வந்தனர் என்பதன் நினைவாக ஏழாம் நாள் அம்மன் திருத்தேரில் பவனி என்றும் நடத்தப்படுகிறது.

    எட்டாம் நாள் கலியுகம் பிறந்ததை நினைவு கூறவே குதிரை வாகனத்தில் அம்மன் பவனி என்றும், ஒன்பதாம் நாள் தான் எடுத்த உருவமான நாகத்தை நினைவு கூறவே 9 தலை நாக வாகனத்தில் அம்மன் பவனி என்றும், பத்தாம் நாள் சத்தாபரணம் அணிந்து அனைவருக்கும் அருள் கொடுக்கும் சத்தாபரணத் திருவிழா என்றும், தெப்பல் திருவிழா என்றும், ஆதி முதல் இன்று வரையில் இந்த திருவிழாவில் மாற்றம் இல்லாமல் கொண்டாடப்படுவது தமிழகத்தின் தனி சிறப்பு.

    இந்த 10 நாட்களும் திருவிழாவாக கொண்டாடுவது முழுக்க முழுக்க இந்த அம்மனின் வரலாற்றுத் திருவிழாவாகும்.

    மேலும் இந்த விசேஷ திருவிழா நாட்களில் அங்காளம்மன் தான் எடுத்த அலங்கோல உருவத்தை நினைவு கூறவே, ஒவ்வொரு நாளும் பக்தர்கள் மொட்டை அடிப்பது, காது குத்துவது, ஆடு, கோழி, அறுத்து, பொங்கல் வைத்து, அபிஷேகம், ஆராதனை, அர்ச்சனை செய்வது சித்தாங்கு, கஞ்சுலி, கபால வேஷம் அணிந்து வருவது, மஞ்சள் ஆடை, வேப்பஞ்சேலை அணிந்து வருவது போன்ற வேஷத்துடன் மேல்மலையனூருக்கு திருவிழா காலங்களில் வந்து நேர்த்தி கடன் செலுத்துகின்றனர்.

    வேண்டுதல் காணிக்கை பிரார்த்தனைகளான, பொன், வெள்ளி பணம் போன்ற காணிக்கை களை உண்டியலில் செலுத்தி பக்தர்கள் தங்களின் வேண்டுதல் பிரார்த்தனையை செய்து செல்வதே இந்த 10 நாள் திருவிழாவாகும்.

    இந்த அம்மனின் வரலாற்றை தொடர்புபடுத்தி செய்யும் திருவிழா வேறு எங்கும் கொண்டாடுவதில்லை. இந்த மேல்மலையனூரில் மட்டுமே ஆதி திருவிழாவாக கொண்டாடப்படுவது தமிழகத்தின் தனி சிறப்பு.

    ×