search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aggressive removal"

    • விருத்தாசலத்தில் நீர்நிைலகளில் ஆக்கிரமிக்கப்பட்ட வீடு-கடைகள் அகற்றப்பட்டது.
    • காவல் உதவி கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின் தலைமையிலான காவலர்கள் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட ஆலடி ரோட்டில் உள்ள நீர் ஓடையை அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்து பல ஆண்டுகளாக வீடு மற்றும் கடைகள் கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவின் பேரில், அதனை நிறைவேற்றும் வகையில் விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் தனபதி தலைமையிலான குழுவினர் ஆக்கிரமிப்பில் இருந்த வீடு மற்றும் கடைகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பாழடைந்த ஒரு வீடு மற்றும் ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் ஆகியவற்றை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றம் செய்தனர். ஆக்கிரமிப்பு செய்யும் பணி அடுத்துவரும் நாட்களில் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆக்கிரமிப்பு செய்யும் பணி நடைபெறுகையில் வட்டாட்சியரிடம் பெண்கள், வீடுகளை இடித்தால், தங்கள் வாழ்வா தாரம் பாதிக்கப்படும் எனவும்தங்களுக்கு போக்கிடம் இல்லை எனவும் கதறி அழுதனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில்நகராட்சி ஊழியர்கள், மின்சார ஊழியர்கள், வருவாய் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். காவல் உதவி கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின் தலைமையிலான காவலர்கள் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ×