search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aerwadi Targah"

    • ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா தொடங்குகிறது.
    • தர்கா ஹக்தார் நிர்வாக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் பிரசித்தி பெற்ற மகான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராகிம் ஷஹீது ஒலியுல்லா அடக்கமாகியுள்ளார். இந்த தர்காவில் வருடந்தோறும் உரூஸ் எனும் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நடைபெறும்.

    இந்த வருடம் 849-ம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழாவின் முதல் நிகழ்ச்சி வருகிற 21-ந்தேதி தொடங்குகிறது. அன்று முதல் தர்கா மண்டபத்தில் இருந்து ஹக்தார்களால் 23 நாட்களுக்கு புகழ்மாலை ஓதப்படும்.

    31-ந்தேதி பாதுஷா நாயகத்தின் பச்சை வர்ணக்கொடி யானை மேல் வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கொடியேற்றமும், முக்கிய நிகழ்ச்சியாக உரூஸ் எனும் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா ஜூன் 12-ந்தேதி மாலை தொடங்கி 13-ந் தேதி அதிகாலை மேளதாளங்கள் முழங்க யானைகள் அணிவகுக்க, குதிரைகள் நாட்டியமாட, சந்தனக்கூடு பவனி வர அனைத்து சமுதாயத்தினரின் அணிவகுப்புடன் புனித மக்பராவில் சந்தனம் பூசப்படும்.

    ஜூன் 19-ந்தேதி நிறைவு நிகழ்ச்சியாக அஸர் தொழுகைக்குப்பின் கொடியிறக்கம் நடைபெறும். இதனைத்தெடர்ந்து அன்று இரவு 7 மணிக்கு தப்ரூக் எனும் நெய்ச்சோறு விநியோகிக்கப்பட்டு சந்தனக்கூடு திருவிழா நிறைவு பெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை தர்கா ஹக்தார் நிர்வாக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    ×