search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Administrators selection"

    • நெல்லை மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியம் அனைத்து ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தொடங்குவது தொடர்பான கூட்டம் மானூர் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் நடந்தது.
    • தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து கிருஷ்ணனிடம் வாழ்த்து பெற்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியம் அனைத்து ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தொடங்குவது தொடர்பான கூட்டம் மானூர் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் நடந்தது.

    இதில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு நிர்வாகிகளாக கூட்டமைப்பு தலைவராக பேட்டை ரூரல் ஊராட்சி தலைவர் சின்னதுரை, செயலாளராக தாழையூத்து ஊராட்சி தலைவர் பீர்முகைதீனும், பொருளாளராக மூவிருந்தாளி ஊராட்சி தலைவர் வெள்ளப்பாண்டியும், துணைத்தலைவர்களாக ஆஷாதேவி, சுப்பிரமணியனும், இணை செயலாளராக சுப்புலெட்சுமி , துணை செயலாளர்களாக சேர்மகனி, பராசக்தியும், செயற்குழு உறுப்பினர்களாக சந்திரா, சண்முக தாய், சுரேஷ், திருப்பதி, சுப்பு லட்சுமி , தன்சில் ரோஸ், பசுபதி ,வேம்பு, பரமசிவன்,ஆலோசகர்களாக இசக்கி ராணி, முருகன்,மெர்சி, ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

    தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து கிருஷ்ணனிடம் வாழ்த்து பெற்றனர்.இதில் அனைத்து ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    ×