search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADIPERU FESTIVAL"

    • ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பெண்கள், புதுமண தம்பதிகள், மூத்த பெண்களிடம் மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டனர்.
    • மழை வேண்டியும், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும், கொடிய நோயிலிருந்து பொதுமக்கள் விடுபட வேண்டியும் பக்தர்கள் வழிபட்டனர்.

    திருச்சி :

    தா.பேட்டை பகுதியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு செவந்தாம்பட்டி ஆற்றுப் பிள்ளையார் கோவிலில் பெண்கள், புதுமண தம்பதிகள், மூத்த பெண்களிடம் மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டனர். மேலும் வீடுகளின் பூஜை அறைகளில் பழங்கள் வைத்தும் வழிபட்டனர்.

    தா.பேட்டையில் பிள்ளாதுரை பெரியமாரியம்மனுக்கு ஆடிப்பெருக்கை முன்னிட்டு செவந்தம்பட்டி மதுரைவீரன் சுவாமி கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், தீர்த்த குடம் சுமந்தும், அக்னி சட்டி ஏந்தியும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். அப்போது பெரியமாரியம்மன், கிராம விநாயகர், சந்திகருப்பு உள்ளிட்ட சுவாமிகளுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து சந்தன காப்பு மற்றும் வளையல் அலங்காரத்தில் பெரிய மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது மழை வேண்டியும், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும், கொடிய நோயிலிருந்து பொதுமக்கள் விடுபட வேண்டியும் பக்தர்கள் வழிபட்டனர்.

    இதேபோன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு செல்லாண்டியம்மன், உடைப்புவாய் கருப்பண்ணசாமி, தேவானூர் ஸ்ரீ ராஜகாளியம்மன், செவந்தாம்பட்டி மதுரைவீரன் சுவாமி, கரிகாலி மகாமாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் வழிபாடுகள் நடந்தது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருளினர். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.

    ×