என் மலர்
நீங்கள் தேடியது "Adi Villi special"
- அம்மனுக்கு பால்,இளநீர், சந்தனம், ஜவ்வாது, மஞ்சள், தேன் போன்ற 16 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.
- மூலவர் 1008 மங்கல வளையல் அலங்காரத்தில் உற்சவரும் சாந்த சுரூபிணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நத்தம்:
நத்தம் மாரியம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு பால்,இளநீர், சந்தனம், ஜவ்வாது, மஞ்சள், தேன் போன்ற 16 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து மல்லிகை, ரோஜா, முல்லை, அரளி, செம்பருத்தி, செவ்வரளி, தாமரை, கனகாம்பரம், சாமந்திப்பூ , செவ்வந்திப்பூ , தாழம்பூ , வாடாமல்லி, ஜாதிமல்லி மலர்கள் கொண்டு மேலும் மங்கல வளையல் மாலை அணிந்தும் சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. மூலவர் 1008 மங்கல வளையல் அலங்காரத்தில் உற்சவரும் சாந்த சுரூபிணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதேப்போலவே மீனாட்சிபுரம் காளியம்மன் கோவில் அசோக் நகர் பகவதி அம்மன், கர்ணன் தெரு ஸ்ரீ மதுர காளியம்மன் அம்மன், ராக்காயி அம்மன் தில்லை காளியம்மன் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் நெய்தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு வளையல் பிரசாதமாக வழங்கப்பட்டது.






