search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Addictive pills"

    • 3 பேர் கைது
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலால் போலீசார் முத்துக்கடையில் இருந்து மாந்தாங்கல் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.

    அவர்களிடம் சோதனை நடத்திய போது போதையை ஏற்படுத்தக்கூடிய 300 மாத்திரைகள் வைத்தி ருப்பது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து போதை மாத்திரைகள் வைத்திருந்த ராணிப்பேட்டை நவல்பூரை சேர்ந்த பால் சுனில் (23), ராணிப்பேட்டை முகமது சுனில் (19), தனுஷ் (19) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×