search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "addiction trafficking"

    பாலக்காடு அருகே ரூ.5 கோடி போதை காய் கடத்திய வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Drugtrafficking

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு போதை தடுப்பு போலீசார் மற்றும் தெற்கு போலீசார் நேற்று ரோந்து சென்றனர். பாலக்காடு பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படி 2 வாலிபர்கள் நின்றனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.

    சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் நடத்திய சோதனையில் ‘போப்பிஸ்ட்ரோ’ எனும் போதை காய் 2¾ கிலோ இருந்தன. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.5 கோடி ஆகும்.

    விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம் பெத்த நாயக்கன்பாளையத்தை சேர்ந்த அருள்மணி (வயது 30), அதே ஊரை சேர்ந்த அருண்மோகன் (30) ஆகியோர் என்பதும், கொச்சியில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கு போதைகாய்களை கடத்திச்செல்வதாகவும் கூறினர்.


    இந்த போதை காய்கள் குறித்து போலீசார் கூறியதாவது:-

    இந்த காய்களில் இருந்து தான் பிரவுன் சுகர், ஹெராயின், கருப்பு உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.

    இந்த காய்களின் பிறப்பிடம் தென்னாப்பிரிக்காவாகும். போதை காய் ஆப்கானிஸ்தானில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. புற்று நோய் வலிக்கு இந்த காய்களில் இருந்து நிவாரண மருந்துகளும் தயாரிக்கப்படுகிறது.

    இதனால் அரசு அனுமதியுடன் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய 3 இடங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. சேலம் வாலிபர்கள் இந்த காயை ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வந்திருந்தால் சர்வதேச போதை கும்பலுடன் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இவ்வாறு போலீசார் கூறினர்.

    வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #Drugtrafficking

    ×