என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adavi Nainar Dam"

    • தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பொழிந்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
    • ஆற்றுபடுகை ஓரம் யாரும் செல்ல வேண்டாம் என பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. நகர் பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வரும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்கிறது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. பிரதான அணையான பாபநாசம் அணையில் 10 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சேர்வலாறில் 4 மில்லிமீட்டரும், கன்னடியனில் 1 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 115.60 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 122 அடியாகவும் உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 1/2 அடி உயர்ந்துள்ளது. அணைகளுக்கு வினாடிக்கு 1496 கனஅடி நீர்வரும் நிலையில், அணையில் இருந்து பாசனத்திற்காக 1,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக வெயில் தலைகாட்டவில்லை. குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. களக்காடு சுற்றுவட்டாரத்தில் 1.40 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பொழிந்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கார் பருவ சாகுபடி பணியிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். கடனா அணை நீர்மட்டம் 1/2 அடி உயர்ந்து இன்று 65 அடியாக உள்ளது. அந்த அணைக்கு 125 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. அங்கு 3 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 71 அடியாக இருந்த ராமநதி இன்று 2 அடி உயர்ந்து 73 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அங்கு 6 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    மாவட்டத்தின் பெரிய அணையான 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் நேற்று 129 அடியாக இருந்த நிலையில் தொடர் மழையால் இன்று காலை நிரம்பியது. அணை இந்த ஆண்டு 2-வது முறையாக முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.

    இந்த வருடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடவிநயினார் கோவில் அணையானது கார் சாகுபடி காலங்களில் 5 வருடங்களுக்கு பிறகு நிரம்பிய நிலையில், கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்ததாலும், அணையில் இருந்து கார் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்ட காரணத்தினாலும் நீர்மட்டமானது வெகுவாக குறைந்தது. இந்த நிலையில், தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக அணையானது 2-வது முறையாக நிரம்பி உள்ளது.

    தற்போது 100 கனஅடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், அவை அப்படியே வெளியேற்றப்பட்டு வருவதால் அனுமன்நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றுபடுகை ஓரம் யாரும் செல்ல வேண்டாம் என பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    • நெல்லை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் இன்று காலை வரையிலும் மழை பெய்யவில்லை.
    • சேரன்மகாதேவி, களக்காடு, நாங்குநேரி ஆகிய இடங்களில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    நெல்லையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 4 நாட்களாக பெய்த கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு நேற்று 5 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலையில் இருந்து மலைப்பகுதியில் மழை குறைய தொடங்கியது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு 2318 அடியாக குறைந்தது.

    நேற்று அணை நீர்மட்டம் 110.85 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 2 அடி உயர்ந்து 112.80 அடியாக இருக்கிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 130 அடியை எட்டியுள்ளது. மணி முத்தாறு அணை நீர் இருப்பு 73 அடியில் நீடிக்கிறது. இன்று காலை வரை பாபநாசம் அணை பகுதியில் 2 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 7 மில்லி மீட்டரும் மழை பெய்தது.

    நெல்லை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் இன்று காலை வரையிலும் மழை பெய்யவில்லை. ஒரு சில இடங்களில் மட்டும் லேசான சாரல் அடித்தது. களக்காடு மலையடிவார பகுதிகளில் பெய்த மழையால் தலையணையில் தண்ணீர் ஆர்ப்பரிக்கிறது. அங்கு சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.

    சேரன்மகாதேவி, களக்காடு, நாங்குநேரி ஆகிய இடங்களில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் குளிர்ந்த காற்றுடன் சாரல் விட்டு விட்டு பெய்கிறது. ராதாபுரம், வள்ளியூர், பணகுடி பகுதிகளில் நேற்று இரவில் சிறிது நேரம் சாரல் அடித்தது. இன்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து ஒரு வாரமாக கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது சற்று குறைந்துள்ளது. தொடர்மழையால் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குளிர்ந்த காற்றுடன் இதமான சீதோஷண நிலை இருப்பதால் பொதுமக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    கடையம் அருகே அமைந்துள்ள ராமநதி அணை தனது முழு கொள்ளளவான 84 அடியில் 82 அடியை எட்டிவிட்டதால் பாதுகாப்பு கருதி நேற்று முதல் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அந்த அணைக்கு வினாடிக்கு 110 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் 88 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இன்று காலை வரை அந்த அணையில் 3 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கடனா அணை பகுதியில் நேற்று கனமழை கொட்டியது. இதனால் அணைக்கு வினாடிக்கு 601 கனஅடி நீர் தண்ணீர் வந்ததால், இன்று ஒரே நாளில் 6 அடி உயர்ந்து அந்த அணை நீர்மட்டம் 69.30 அடியை எட்டியுள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை பகுதியில் கனமழை கொட்டியது. இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து இன்று ஒரே நாளில் அணை நீர்மட்டம் சுமார் 12 அடி அதிகரித்து 109.50 அடியை எட்டியுள்ளது. மழை குறைந்துவிட்டாலும் மாவட்டங்களில் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து இருப்பதால் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

    மாவட்டத்தில் தென்காசியில் 3.2 மில்லிட்டரும், செங்கோட்டையில் 2 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. குண்டாறு அணை பகுதியில் அதிகபட்ச மாக 12 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    ×