search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Action taken"

    • 62 நிறுவனங்களில் தொழிலாளா் நலத்துறை அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.
    • மாற்று விடுமுறையோ வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடாமலும் இருந்த நிறுவனங்கள் கண்டறியப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று தொழிலாளா் நலத்துறை சாா்பில் கடைகள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 62 நிறுவனங்களில் தொழிலாளா் நலத்துறை அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

    இந்த ஆய்வில் 37 நிறுவனங்களில் பணியாளா்களுக்கு விடுமுறை அளிக்காமலும் இரட்டிப்பு சம்பளம் மற்றும் மாற்று விடுமுறையோ வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடாமலும் இருந்த நிறுவனங்கள் கண்டறியப்பட்டது. இதனையடுத்து அந்த நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தொழிலாளா் உதவி ஆணையா் அமலாக்கம் (பொறுப்பு) சதீஷ்குமாா் தெரிவித்துள்ளனர்.

    ×