என் மலர்
நீங்கள் தேடியது "action against dying factory"
- வாட்டர் கிரெடிட் கருத்துருவை நடைமுறைப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்.
- நாடு முழுக்க, பூஜ்ய நிலை சுத்திகரிப்பு முறையை அமல்படுத்த வேண்டும்
திருப்பூர் :
திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க 32வது பொதுக்குழு கூட்டம் திருப்பூர் தெற்கு ரோட்டரி ஹாலில் நடந்தது.கூட்டத்தில் சாயநீரை சுத்திகரித்து மறு சுழற்சி வாயிலாக பயன்படுத்துபவர்களுக்கு கார்பன் கிரெடிட் வழங்குவது போல வாட்டர் கிரெடிட் கருத்துருவை நடைமுறைப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்.
வெளி மாவட்டங்களில் அனுமதியின்றி இயங்கும் சாய ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருப்பூரை போல் நாடு முழுக்க, பூஜ்ய நிலை சுத்திகரிப்பு முறையை அமல்படுத்த வேண்டும். இம்முறையை முழுமையாக அமல்படுத்திய திருப்பூர் சாய கழிவுநீர் பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கிய வட்டியில்லா கடனை மானியமாக மாற்றித்தர வேண்டும்.
வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் வழங்கவும், தற்போதுள்ள வட்டி விகிதத்தை உயர்த்தாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடர்கலவை உப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.மின் கட்டணம் மற்றும் மின்சார நிலைக்கட்டண உயர்வை, மாநில அரசு, மறுபரிசீலனை செய்ய வேண்டும். மத்திய அரசு வழங்கிய டப் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






