search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Accused Surrender"

    பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் இன்று மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தார்.
    மதுரை:

    தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராகவும், மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பராகவும் பொட்டு சுரேஷ் இருந்தார். கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி 31ல் மதுரை சத்யசாய் நகரில் உள்ள அவரது வீட்டின் முன்பு அவரை ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்தது.

    இந்த சம்பவம் குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக அட்டாக் பாண்டியை சேர்த்தனர். இதில் தொடர்புடைய பலரை கைது செய்தனர்.



    ஆனால் அட்டாக்பாண்டி தொடர்ந்து 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். பின்னர் 2015-ம் ஆண்டு மும்பையில் அவரை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தனக்கு ஜாமீன் வழங்குமாறு தாக்கல் செய்த மனுக்களை 5க்கும் மேற்பட்ட முறை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சபா ரத்தினம் என்பவர் கடந்த 5 வருடங்களாக தலைமறைவாக இருந்து வந்தார்.

    அவரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் இன்று காலையில் அவர் மதுரை 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரணடைந்தார்.


    ×