search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ACCUMULATED WATER"

    • ஜெயங்கொண்டம் அருகே பெய்த தொடர் மழையால் சாலையில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்
    • மேலும் சாலையின் இரண்டு புறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைப்பதுடன், சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு தார்ச் சாலை அமைத்து தர கோரிக்கை எழுந்துள்ளது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவமங்கலம் வடக்குத் தெருவில் சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள சிமெண்ட் சாலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் சாலையில் முழுவதும் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.

    மேலும் இதனால் சில வீடுகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து இரவில் தூங்க முடியாத சூழல் ஏற்பட்டது.

    தேங்கி நிற்கும் மழை நீரால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மக்கள் வெளியில் வர முடியாமல் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

    அவ்வழியாக குடியிருப்பு வாசிகள், பாதசாரிகள், இருசக்கர வாகனம், ஆடு, மாடுகள் உள்ளிட்டவைகள் செல்லும்போது மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

    மேலும் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளில் ஓதம் காத்து வீட்டில் படுக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்து மருத்துவமனை சென்று திரும்பிய சம்பவமும் நடந்துள்ளது.

    மேலும் இதனால் அப்பகுதியில் குடியிருப்பு வாசிகளுக்கு அதிவிரைவில் நோய் தொற்று பரவும் அபாயமும் இருப்பதால் அந்த மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்தி சாலையில் சரலை மண் கொட்டி மேடாக்கி சாலையை உயர்த்த கோரிக்கை எழுந்துள்ளது.

    மேலும் சாலையின் இரண்டு புறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைப்பதுடன், சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு தார்ச் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×