என் மலர்
நீங்கள் தேடியது "accidents due to bridge work"
- பணிகள் விரைந்து முடிக்கப்படாத தால் அப்பகுதியின் வழியே செல்லும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டு உள்ளது .
- பெரும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பு பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் அருகே பாம்பார்புரம் பகுதி அமைந்துள்ளது . இந்த பகுதிக்கு செல்லக்கூடிய பிரதான சாலை சுற்றுலா பகுதிகளுக்கு செல்லும் முக்கியசாலையாகவும் இருந்து வருகிறது. பாம்பா ர்புரம் மற்றும் பசுமை பள்ளத்தாக்கு செல்ல க்கூடிய பிரதான சாலை களில் நெடுஞ்சாலைத்துறை மூலமாக பாலம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது .
இந்தப் பணிகள் விரைந்து முடிக்கப்படாத தால் அப்பகுதியின் வழியே செல்லும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டு உள்ளது . மேலும் அப்பகுதியில் முறையான எச்சரிக்கை பலகையும் வைக்கப்படாத தால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்ற னர் . எனவே பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. இரவு நேரங்களில் வரும் வெளியூர் வாகனங்கள் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். பெரும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பு பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.






