என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Accident due to bursting of firecrackers"

    • தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்
    • போலீஸ் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் ,வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் பட்டாசுகள் வியாபாரம் செய்து வருபவர் சுரேஷ் (42).

    நேற்று மாலை வாலாஜாவில் ஆசிரியர் காலனி எம்.ஜி.ஆர் நகர் பகுதி வீட்டில் உள்ள பட்டாசு குடோனில் சுரேஷ்(42 )மற்றும் ராஜேந்திரன் (36)ஆகிய இருவரும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக திடீரென தீப்பொறி பட்டதில் பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் பட்டாசுகள் வைத்திருந்த குடோனின் சிமெண்ட் ஷீட் மேற்கூரையும், கொட்டகையும் எரிந்து சாம்பலானது. மேலும் இதில் சுரேஷ்(42), ராஜேந்திரன் (36)இருவரும் பலத்த காயமடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இருவரும் சிகிச்சை க்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் பட்டாசுகள் வெடித்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தியதால் அக்கம் பக்கத்தினர் அலறி அடித்து வெளியே வந்து பார்த்தனர்.

    பின்னர் இது பற்றி தகவலறிந்து வந்த ராணிப்பேட்டை தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×