search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "abirami andhadhi"

    வாழ்வின் வலிகளால் முடங்கிக் கிடக்கும் எண்ணற்ற எளிய மக்களுக்கு சக்தி கொடுத்து, அவர்கள் வாழ்வில் வளம், நலன் கொடுக்கும் மந்திர சக்திவாய்ந்த நூலாக திகழ்கிறது ‘அபிராமி அந்தாதி.’
    வாழ்வின் வலிகளால் முடங்கிக் கிடக்கும் எண்ணற்ற எளிய மக்களுக்கு சக்தி கொடுத்து, அவர்கள் வாழ்வில் வளம், நலன் கொடுக்கும் மந்திர சக்திவாய்ந்த நூலாக திகழ்கிறது ‘அபிராமி அந்தாதி.’ அபிராமி அந்தாதியின் ஒவ்வொருச் சொல்லும் மந்திரச் சொற்களாகவே இருக்கின்றன. ‘அந்தாதி’ என்றால் முதல் பாடலின் இறுதி எழுத்து, அசை, சொல், சீர், அடி ஆகியவற்றுள் ஒன்று அதற்கடுத்த பாடலின் தொடக்கமாகக் கொண்டு பாடப்படுவதாகும். அதாவது ஒரு பாடலின் அந்தம் அடுத்தப் பாடலுக்கு ஆதியாக வருவது ‘அந்தாதி’ ஆகும்.

    அபிராமி அந்தாதியின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு காரியத்தைச் சித்தி செய்யக்கூடிய மந்திரசக்தி படைத்தவையாக உள்ளன. அபிராமி அந்தாதியின் முதல் பாடல் ‘உதிக்கின்ற’ என்று தொடங்கி, அதன் நூறாவது பாடல் ‘உதிக்கின்றவே’ என்றே முடிகிறது. ஆம்! அனுதினமும் அபிராமி அந்தாதியை பாராயணம் செய்து அபிராமி அம்மனை நினைத்து வழிபட்டால், வாழ்வில் அல்லல்கள் மறைந்து நல்லவை எல்லாம் உதித்தெழும்.
    ×