என் மலர்
நீங்கள் தேடியது "Aanaimaduvu dam"
- இந்தாண்டு பெய்த கோடை மழையில் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து ஜூலை மாத இறுதியில் 25.75 அடியை எட்டியது.
- வசிஷ்ட நதி ஆற்றுப்படுகை கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை கிராமத்தில் வசிஷ்டநதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 263.86 ஏக்கர் பரப்பளவில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது.
இந்த அணையால், குறிச்சி, நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னம நாயக்கன்பாளையம், சந்திரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில், 5,011 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. பேளூர், குறிச்சி, கொட்டவாடி, அத்தனூர்பட்டி ஏரிகளும், 20-க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்களும், நிலத்தடி நீர் ஆதாரமும், பாசன வசதியும் பெறுகின்றன.
இந்தாண்டு பெய்த கோடை மழையில் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து ஜூலை மாத இறுதியில் 25.75 அடியை எட்டியது. அணையில் 35.06 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது. இதனையடுத்து ஆகஸ்ட் மாதத்தில் பெய்த பருவமழையால் ஆகஸ்டு 31-ந் தேதி அணையின் நீர்மட்டம் 45 அடியாக உயர்ந்தது. அணையில் 98 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது.
தொடர்ந்து அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான சித்தேரி, குதிமடுவு, பெரியகுட்டி மடுவு, சந்தமலை, அருநூற்றுமலை பகுதியில் இந்த மாதம் பெய்த பருவ மழையால், அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 60 அடியாக உயர்ந்து, 197 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது.
இந்நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று மாலை 4:30 மணி முதல் இரவு 8.30 மணி வரை தொடர்ந்து 4 மணி நேரம் கன மழை பெய்தது. நேற்று ஒரே நாளில் 15 சென்டிமீட்டர் மழை கொட்டித் தீர்த்தத்தால், அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 5 அடி உயர்ந்து அணையில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 65 அடியை எட்டியது.
அணையில் 237 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியுள்ளது. அணைக்கு தொடர்ந்து வினாடிக்கு 284 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் இன்று மாலைக்குள் ஆனைமடுவு அணை முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பும் என்பதால் அணை ஆயக்கட்டு பாசன விவசாயிகளும், வசிஷ்ட நதி ஆற்றுப்படுகை கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதே போல ஏத்தாப்பூர், கரியகோவில், வீரகனூர், நத்தக்கரை மற்றும் சேலம் மாநகர் உள்பட பல பகுதிகளிலும் நேற்று கன மழை கொட்டியது. இந்த மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆனைமடுவில் 153 மி.மீ. மழை கொட்டியது. சேலம் மாநகர் 16.6, ஏற்காடு 1.8, வாழப்பாடி 3.9, ஆத்தூர் 6.2, கெங்கவல்லி 14, ஏத்தாப்பூர் 22, கரியகோவில் 16, வீரகனூர் 29, நத்தக்கரை 11, மேட்டூர் 0.6 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 276.1 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அருநூற்றுமலை அடிவாரம் புழுதிக்குட்டை கிராமத்தில், வசிஷ்டநதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 263.86 ஏக்கர் பரப்பளவில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது. இந்த அணையால், குறிச்சி, நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சி.என். பாளையம், சி.பி.வலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பேளூர், குறிச்சி, கொட்டவாடி, அத்தனூர்பட்டி ஏரிகளும், 20-க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்களும், நிலத்தடி நீராதாரமும் பாசன வசதியும் பெறுகின்றன.
கடந்த 2005 டிசம்பர் 26-ந்தேதி ஆனைமடுவு அணை நிரம்பியது. அதற்கு பிறகு 16 ஆண்டுகளாக அணை நிரம்பவில்லை. இந்த நிலையில், கடந்த 2 மாதமாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தது. இந்த மழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. நேற்று அணையின் நீர்மட்டம் 65.45 அடியாக உயர்ந்தது. அணையில் 248.51 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கியுள்ளது.
அணையின் பாதுகாப்பு கருதி பிரதான மதகு வழியாக உபரிநீராக வினாடிக்கு 110 கன அடி தண்ணீர் வசிஷ்டநதியில் திறக்கப்பட்டுள்ளது.
16 ஆண்டுகளுக்குப் பிறகு ஆனைமடுவு அணை நிரம்பியதோடு, அணையிலிருந்து வசிஷ்டநதியில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், ஆனைமடுவு அணை பாசன விவசாயிகள் மட்டுமின்றி, வசிஷ்டநதி ஆற்றுப்படுகை கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






