search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aadi Last Friday"

    இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி கடைசி வெள்ளி விழாவுக்காக 100 சிறப்பு பஸ்களை இயக்க அனைத்துத்துறை ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
    சாத்தூர்:

    சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா முன்னேற்பாடு தொடர்பாக கிராம பொதுமக்கள், அனைத்துத்துறை ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் சாத்தூரில் நடந்தது.

    வருவாய் கோட்டாட்சியர் மங்களமூர்த்தி தலைமை தாங்கினார். சாத்தூர் வட்டாட்சியர் சாந்தி, காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் கிராமத்தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    பக்தர்களின் வசதிக்காக இருக்கன்குடி கோவில் மேட்டில் தற்காலிக பஸ் நிலையம் 3 அமைப்பது, பஸ் நிலையத்தில் குடிநீர் மற்றும் நிழற்குடை அமைப்பது, போக்குவரத்துத்துறை சார்பில் 100 சிறப்பு பஸ்களை இயக்குவது, பொதுப்பணித்துறை சார்பில் நீர்த்தேக்க கரை மீது உள்ள சாலையை சீர்செய்வது, மின்வாரியம் சார்பில் திருவிழா நடைபெறும் 2 தினங்கள் தடையில்லா மின்சாரம் வழங்குவது.

    தீயணைப்புத்துறை சார்பில் இரு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் கோவிலைச் சுற்றியுள்ள தீத்தடுப்பு சாதனங்கள் அமைப்பது, 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.


    ×