என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A special highlight of the festivals is the Ani Pramotsava festival."

    • தங்க கொடிமரத்தில் காலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் தொடங்கும்
    • 10 நாட்களுக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் தனி சிறப்பிற்குரியது ஆனி பிரமோற்சவ விழா.

    தட்சணாயண புண்ணிய காலம் என அழைக்கப்படும் ஆனி பிரமோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி கோவிலின் 3-வது பிரகாரத்தில் அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் காலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கொடியேற்றி விழாவை தொடங்கி வைக்கின்றனர்.

    அப்போது அலங்கார ரூபத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாச லேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து விநாயகர் உண்ணாமலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் பவனி வந்து காட்சியளிப்பார்கள்.

    ஆனி பிரமோற்சவ விழாவை முன்னிட்டு தொடர்ந்து 10 நாட்களுக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    விழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்ப ட்டுள்ளன.

    ×