என் மலர்
நீங்கள் தேடியது "A snake entered the crowd"
- மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் டி.எஸ்.பி. மற்றும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் தேவாரப்பாடல்கள் பாடியபடி விநாயகர் சிலை ஊர்வலமாக புறப்பட்டது.
- அப்போது அங்கிருந்த பாம்பு ஒன்று கூட்டத்தில் புகுந்ததால் பக்தர்கள் அலறியடித்து நாலாபுறமும் ஓடத்ெதாடங்கினர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பாறைப்பட்டி காளியம்மன் கோவில் முன்பு ஒவ்வொரு ஆண்டும் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு 3 நாட்கள் வழிபாட்டுக்கு பின்பு வத்தலக்குண்டு ரோடு, பேகம்பூர் வழியாக கோட்டைக்குளத்தில் எடுத்து சென்று கரைக்கப்படுவது வழக்கம்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் நடந்த விநாயகர் ஊர்வலத்தில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்ததால் இந்த ஊர்வலத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அதன்படி நேற்று முன்தினம் ேகாவில் முன்பு ஊர் பொதுமக்கள் சார்பில் 6 அடி உயர விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டது. அந்த சிலை இன்று பொதுமக்கள் சார்பில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் டி.எஸ்.பி. மற்றும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டனர். தேவாரப்பாடல்கள் பாடியபடி விநாயகர் சிலை ஊர்வலமாக புறப்பட்டது.
மேளதாளங்கள் முழங்க அழைத்து வரப்பட்ட விநாயகர் சிலை பேகம்பூர் பள்ளிவாசல் அருகே வந்தபோது வாத்தியங்கள் இசைப்பதை நிறுத்துமாறு போலீசார் தெரிவித்தனர்.
அப்போது பொது மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நாகல்நகர் வரதராஜ பெருமாள் கோவில் குழுவினரால் பஜனை பாடல்கள் பாடி விநாயகர் சிலை கொண்டு செல்லப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மீண்டும் மேளதாளங்கள் முழங்க சிலையை கரைப்பதற்காக எடுத்தனர். அப்போது அங்கிருந்த பாம்பு ஒன்று கூட்டத்தில் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் அலறியடித்து நாலாபுறமும் ஓடத்ெதாடங்கினர்.
அப்ேபாது அங்கிருந்த தீயணைப்புத்துறையினர் அந்த பாம்பை லாவகமாக பிடித்து அங்கிருந்து எடுத்துச் சென்றனர். அதன்பிறகு விநாயகர் சிலை கரைக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் நிம்மதி அடைந்தனர்.






