search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A pregnant woman who wears jewelry"

    • ராமநாதபுரத்தில் கர்ப்பிணி பெண்ணிடம் நகை திருடப்பட்டது.
    • ஸ்கேன் எடுக்க சென்றபோது அந்த பெண் அணிந்திருந்த 7 பவுன் நகையை காணவில்லை.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த முனியசாமி மனைவி சித்ராதேவி(35). கர்ப்பிணியான இவர் கமுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தார். அப்போது ரத்தஅழுத்தம் கூடுதலாக இருக்கும் என்று கூறி இரவு தங்க வேண்டும் என்றதால் சித்ராதேவி அங்கேயே தங்கிவிட்டார். ஸ்கேன் எடுக்க சென்றபோது அவர் அணிந்திருந்த 7 பவுன் நகையை காணவில்லை.

    இதுகுறித்த புகாரின்பேரில் கமுதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபரை தேடி வருகிறார்.

    ×