என் மலர்
நீங்கள் தேடியது "A new tool"
- மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிறுநீரக கல் சிகிச்சைக்கு புதிய கருவி வேண்டும் என அமைச்சரிடம் பூமிநாதன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
- தென்மாவட்ட மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மதுரை
தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று மதுரை வந்தார். அவரை மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன் சந்தித்து பேசினார்.
அப்போது மதுரை அரசு இராஜாஜி மருத்துவமணை தங்கள் நிர்வாகத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும், இச்சிறப்பு வாய்ந்த மருத்துவமனையில் கடந்த ஒருடத்திற்கு மேலாக சிறுநீரக கல் அகற்றும் கருவி பழுதடைந்து உள்ளதால் தென்மாவட்ட மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.
ஆகையால் சிறுநீரக கல் சிகிச்சைப்பிரிவுக்கு புதிய கருவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார்.
இதனையடுத்து இது தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மா.சுப்பி ரமணியன் உறுதியளித்தார்.






