என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "A mission to find a crocodile"
- அமராவதி ஆற்றில் முதலையைத் தேடும் பணி நடைபெறுகிறது.
- மக்கள் ஆற்றில் இறங்கி குளிப்பதைத் தவிா்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
தாராபுரம் :
தாராபுரம் அமராவதி ஆற்றில், ஈஸ்வரன் கோயில் ஆற்றுப் பாலத்தின்கீழ் சுமாா் 10 அடி நீள முதலை இருப்பதாக வந்த தகவலையடுத்து, இப்பகுதிகளில் நகராட்சி நிா்வாகம், வனத் துறை சாா்பில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு முதலையைத் தேடும் பணி நடைபெற்றது.
தாராபுரம் தீயணைப்புத் துறையினா், காங்கயம் வனத் துறையினா் இணைந்து முதலையைத் தேடும் பணியில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஈடுபட்டனா். அப்போது கனமான வலையை அறுத்துக் கொண்டு முதலை தப்பியது.
இதையடுத்து 4 ம் நாளான இன்று முதலையைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. ஆனால் முதலை அகப்படவில்லை.
இந்த நிலையில், தாளக்கரை உள்ளிட்ட கிராமப் பகுதியின் அருகில் உள்ள அமராவதி ஆற்றில் முதலையைத் தேடும் பணி நடைபெறுகிறது.
இது குறித்து காங்கயம் வனச் சரக அலுவலா் தனபால் கூறியதாவது:- தற்போது ஆற்றில் தண்ணீா் செல்வதால் முதலை இங்கிருந்து இடம்பெயா்ந்து சென்றிருக்கலாம். எனினும், அந்த முதலை 10 கி.மீ. தொலைவுக்கு மேல் சென்றிருக்க வாய்ப்பில்லை. இன்னும் ஓரிரு நாள்களில் முதலையைப் பிடித்து விடுவோம். இப்பகுதி மக்கள் ஆற்றில் இறங்கி குளிப்பதைத் தவிா்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்