என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A gang of 4"

    • மர்ம கும்பல் கைவரிசை
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பச்சக்குப்பம் ரெயில்வே மேம்பாலம் அருகே காதல் ஜோடி 2 பேர் தனிமையில் பேசிக்கொண்டிருந்தனர். இதனை மர்ம கும்பல் நோட்டமிட்டது.

    அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல், 2 பேரையும் பிடித்து சரமாரியாக தாக்கினர். மேலும் அவர்களிடம் இருந்த 2 பவுன் தங்க சங்கலி, செல்போன் மற்றும் பணம் உள்ளிட்டவைகளை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து 2 பேரும் ஆம்பூர் தாலுகா போலீசார் புகார் கொடுத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×