என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A future event"

    • கடந்த 13-ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
    • ஒப்பாரி வைத்து கோரிக்கையை வலியுறுத்தினர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை அடுத்த புனல்காடு கிராமம் அருகே உள்ள மலையடிவாரத்தில் குப்பைகளை கொட்டும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் கடந்த 13-ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டத்தை நடத்துகின்றனர்.

    அதன்படி நேற்று 15-வது நாளாக நூதன முறையில் பாடை கட்டி அதன்மேல் பொம்மையை வைத்தும், மேலும் இரு பொம்மைக்கு மாலை அணிவித்தும் பொம்மைகளை பிணமாக பாவித்து, ஒப்பாரி வைத்து கோரிக்கையை வலியுறுத்தினர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இங்கு குப்பை கொட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் வருங்காலங்களில் ஏற்படும் நிகழ்வை தான் நாங்கள் இன்று போராட்டமாக மேற்கொண்டோம் என்றனர்.

    ×