என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "A dangerous pit"
- வாகன ஓட்டிகள் விழுந்து காயம்
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள வடதண்டலம் கிராமம், ஆரணி சாலையில் சிறு பாலத்தில் சேதம் அடைந்து, தார் சாலையின் பக்கத்தில் குழிப்பள்ளம் ஏற்பட்டுள்ளது.
அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அதில் விழுந்து காயம் அடைந்தனர். இந்நிலையில் வடதண்டலம் இளைஞர்கள் விபத்து ஏற்படாமல் இருக்க சாக்கு பையில் மணலைக் கொட்டி அடுக்கி வைத்துள்ளனர்.
அந்த வழியில் செல்லும் நெடுஞ்சாலை துறையில் பணி புரியும் அலுவலர்கள் கடந்த 3 மாதமாக அதை சரி செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் அந்த வழியாக இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் செல்கின்றனர்.
மேலும் அதிக எடை கொண்ட கனரக வாகனங்கள் வந்தால் சிறுபாலம் உடைந்து விடக் கூடிய அபாயத்தில் உள்ளது. இதனை சரி செய்ய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டம் என்று வயாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்