search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A DAMAGED BRIDGE"

    • சேதமடைந்த பாலம் மழையால் இடிந்து விழுந்தது.
    • போக்குவரத்து துண்டிக்கப்பட்டது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் ஊராட்சியில் வக்கரமாரி காலனி உள்ளது. இப்பகுதியில் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதேபோல் அந்த பகுதிக்கு அருகில் கோடாலிகருப்பூர் காலனி விரிவுபடுத்தப்பட்ட பகுதியில் சுமார் 130 குடும்பத்தினர் உள்ளனர். இந்த பகுதியில் அணைக்குடம்-அணைக்கரை சாலையில் இருந்து வக்கரமாரி காலனி பகுதிக்கு செல்வதற்கு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த சாலையின் குறுக்கே பொன்னார் பிரதான வாய்க்காலில் இருந்து பிரிந்து வரும் 4-ம் எண் பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலை கடந்து குடியிருப்பு பகுதிக்கு செல்லும் வகையில் 4-ம் எண் வாய்க்காலின் மீது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு சிறு பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்தநிலையில், தற்போது பெய்த மழையின் காரணமாக அந்த பாலம் நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அந்த பாலத்தின் வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    ×