search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A central panel study"

    • மரக்கன்றுகளை நட்டனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் கே.பந்தாரப்பள்ளி ஏரிக்கரையில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகளை ஜல் சக்தி அபியான் திட்டத்தின் திருப்பத்தூர் மாவட்டத்திற்கான மத்தியக்குழு கண்காணிப்பு அலுவலரும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இயக்குனருமான தினேஷ் குமார் ராணா பார்வையிட்டு ஆய்வு செய்தார் அதன் பிறகு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்கள்.

    உடன் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா, ஜல் சக்தி அபியான் திட்டத்தின் தொழில்நுட்ப அலுவலர் ராஜேஷ் குலதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, ஊரக வளர்ச்சித்துறை செயற் பொறியாளர் சுந்தரபாண்டியன், உதவி செயற்பொறியாளர்கள் மகேஷ் குமார், பழனிசாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×