search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A Case Against a Teenager Who Threatened to Commit Suicide"

    • தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • முன்விரோதம் காரணமாக சிலர் தாக்கியதாகவும், அவரது இருசக்கர வாகனத்தை எரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

    திருமங்கலம்

    திருமங்கலம் தேவர் தெருவை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் மதனபிரகாஷ் (36), கூலி தொழிலாளி. இவரை முன்விரோதம் காரணமாக சிலர் தாக்கியதாகவும், அவரது இருசக்கர வாகனத்தை எரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மதனபிரகாஷ் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்துள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள உயர் செல்போன் கோபுரத்தின்மீது ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் திருமங்கலம் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவரை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின்பேரில் அவர் கீழே இறங்கினார். தற்கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக திருமங்கலம் போலீசார் மதனபிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ×