search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "QR Code"

    • யுடிஎஸ். மொபைல் ஆப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ெரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    • க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்யும் வகையில் ஒட்டப்பட்டு இருந்தன.

    உடுமலை : 

    திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ், பாலக்காடு - திருச்செந்தூர், பாலக்காடு - சென்னை மற்றும் கோவை - மதுரை, பொள்ளாச்சி - கோவை உள்ளிட்ட ெரயில்கள் உடுமலை, பொள்ளாச்சி வழியாக செல்கின்றன.இந்நிலையில் பயணிகள் நீண்ட வரிசையில் நிற்காமல், டிக்கெட் பதிவு செய்ய, யுடிஎஸ். மொபைல் ஆப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ெரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் க்யூ ஆர் கோடு அமைத்து, ெரயில்வே நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ரெயில் நிலையம் அறிவிப்பு பலகையில், க்யூஆர் கோடு பார் யுடிஎஸ் ஆன் மொபைல் ஆப் என எழுதப்பட்டுள்ளது. அதில் க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்யும் வகையில் ஒட்டப்பட்டு இருந்தன.

    இதை பயணிகள் ஸ்கேன் செய்தால் மொபைல் ஆப்பிற்குள் செல்கிறது. அதன்பின் யுடிஎஸ்., மொபைல் ஆப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் இருந்து முன்பதிவில்லாத டிக்கெட் (அன் ரிசவர்டு) சீசன் டிக்கெட் மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட்டுக்குரிய கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

    டிக்கெட் பரிசோதகரிடம் காண்பித்து செல்லும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் நேரம் வீணாகுவது, காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் இதுபோன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என ெரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தண்ணீர் பாட்டில் பிஸ்கட் உள்ளிட்டவையும் பெற்றுக் கொள்ளலாம்.
    • தொழில்நுட்பத்தால் வாடிக்கையாளர்கள் எளிதாக வேண்டியதை விரும்பி சாப்பிடலாம்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், கரீம் நகரில் தனியார் நிறுவனம் நவீன தொழில்நுட்பத்தில் புதிய டீக்கடை ஒன்றை திறந்து உள்ளது.

    இந்த டீக்கடையில் டீ மாஸ்டர், பணியாளர்கள் கிடையாது.

    கியூ ஆர் கோர்டை ஸ்கேன் செய்யும் வசதி செய்யப்பட்டு உள்ளது. இந்த கியூ ஆர் கோட்டை ஸ்கேன் செய்தால் போதும் தங்களுக்கு விருப்பமான டீயை வாங்கி குடிக்கலாம்.

    மேலும் தண்ணீர் பாட்டில் பிஸ்கட் உள்ளிட்டவையும் பெற்றுக் கொள்ளலாம்.

    நவீன தொழில்நுட்பத்திலான டீக்கடையை ஆந்திர மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கமலாகர், மேயர் சுனில் ராவ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதுகுறித்து தனியார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினோத்குமார் கூறுகையில், தற்போது டீ மாஸ்டர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது.

    மேலும் டீ மாஸ்டர்கள் அதிக அளவில் சம்பளம் கேட்கின்றனர். தொழில்நுட்பத்தால் வாடிக்கையாளர்கள் எளிதாக வேண்டியதை விரும்பி சாப்பிடலாம்.

    தற்போது ஆந்திரா தெலுங்கானாவில் ஒரே சமயத்தில் 600 கடைகள் திறக்கப்பட்டுள்ளன. விரைவில் நாடு முழுவதும் இந்த தொழில்நுட்பத்தை கொண்டு செல்ல உள்ளதாக தெரிவித்தார்.

    • சமீபகாலமாக திருமண அழைப்பிதழில் கியூஆர் கோடு போடும் பழக்கம் அதிகரித்து வருகிறது.
    • பொதுவாக திருமணத்தில் மணப்பெண்ணுக்கு மெஹந்தி போடப்படும்.

    இந்தியா டிஜிட்டல் மயமாகி வருகிறது என்று பெருமையோடு சொல்கிறோம். இதில் எல்லோரும் அவரவர் பங்குக்கு ஏதாவது ஒரு வகையில் ஒத்துழைப்பது தப்பில்லை.

    ரோட்டோரத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளி வரை டிஜிட்டல் மயத்துக்கு மாறி விட்டது என்னவோ ஆச்சரியம்தான். இதை விழிப்புணர்வு என்று எடுத்துக்கொண்டாலும் சரி. புதுமையின் மீதான ஈர்ப்பு என்றாலும் சரி.

    அதே நேரம் சதாசர்வ காலமும் ஒவ்வொருவரும் நாமும் டிஜிட்டலில் புதுமை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். இப்படி யோசித்து யோசித்து ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு புதுமையை செய்து கொண்டே வருகிறார்கள்.

    சமீபகாலமாக திருமண அழைப்பிதழில் கியூஆர் கோடு போடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அதாவது திருமணத்திற்கு வர முடியாதவர்களும் அந்த அழைப்பிதழில் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து மொய்யை அனுப்பி விடுவதற்கு அப்படி ஒரு புதிய வசதியை கொண்டு வந்தது ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் அதையும் தாண்டி விட்டார்கள் ஒரு புதுமண தம்பதி. பொதுவாக திருமணத்தில் மணப்பெண்ணுக்கு மெஹந்தி போடப்படும். அப்படி மெஹந்தி போட்டதில் அந்தப் பெண்ணின் கையில் கியூஆர் கோர்டு வடிவை பதிவு செய்திருக்கிறார்கள். வாழ்த்துச் சொல்ல போகும்போது மணப்பெண் கையை குலுக்கி கவரில் இருக்கும் பணத்தையும் கையில் கொடுப்பதுதான் வழக்கம். ஆனால் கை குலுக்கி விட்டு கையில் இருக்கும் கியூ.ஆர்.கோடை ஸ்கேன் செய்து மொய்யை செலுத்தி விடலாமே என்ற புதுமையான ஐடியாவை வெளியிட்டுள்ளார்கள். அந்த பெண்ணின் கையில் வரையப்பட்டிருந்த கியூஆர் கோட்டை ஸ்கேன் செய்து பலர் மொய்யை அனுப்பியது பலரையும் வியக்க வைத்தது.

    இப்படி எல்லாமா யோசிப்பாய்ங்க என்றுதான் நினைக்கத் தோன்றும். புதுமைக்கு ஒரு அளவே இல்லையா என்று சொல்லும் அளவுக்கு டிஜிட்டல் ஒவ்வொருவரையும் பாடாய்ப்படுத்துகிறது.

    • வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்களில் ‘கியூ ஆர்’ கோடு ஒட்டும் பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
    • கியூஆர்’ கோடு மூலம் வரிகள், புகார்களை வீடுகளில் இருந்து செய்ய முடியும்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி உத்தரவின் படி மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, சுகாதார அலுவலர் சாகுல் அமீது ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் நெல்லை மாநகராட்சியில் வீடுவீடாக 'கியூ ஆர்' கோடு ஒட்டும் மணி தீவிரமடைந்துள்ளது.

    அதன்படி தச்சை மண்டலத்திற்கு உட்பட்ட நெல்லை சந்திப்பு செல்வி அம்மன் கோவில் பகுதியில் சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையில் துப்புரவு ஆய்வாளர் ஜானகிராமன், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் சங்கர், மகாலட்சுமி, சந்துரு, இசக்கி, ஆறுமுகம், பிரேமா, கணேசன், முருகன், வகாப், ராஜசேகர், சுரேஷ், கிருஷ்ணன் ஆகியோரை கொண்ட குழுவினர் வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்களில் 'கியூ ஆர்' கோடு ஒட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்த 'கியூஆர்' கோடு மூலம் சொத்து வரி, தொழில்வரி, பிறப்பு, இறப்பு சான்றிதழ், வரைபட அனுமதி தொழில் நிலுவைத் தொகை, தெருக்களில் உள்ள புகார்கள் அனைத்தையும் வீடு மற்றும் கடைகளில் இருந்து செய்ய முடியும். 

    • கரண் சிங் குமாரை போலீசார் கைது செய்தனர்.
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புவனேஸ்வர் :

    ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரை தலைமையிடமாக கொண்டு நிதி தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.

    இந்த நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் நொய்டாவை சேர்ந்த மற்றொரு நிதி தொழில்நுட்ப நிறுவனத்துடன் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு ஒப்பந்தம் செய்து கொண்டது.

    அந்த ஒப்பந்தத்தின் கீழ் வணிக பயன்பாட்டிற்காக புவனேஸ்வர் நிதி தொழில்நுட்ப நிறுவனம், நொய்டா நிறுவனத்துக்கு யூபிஐ (பண பரிமாற்றத்துக்கான அடையான எண்) விவரங்களை வழங்கியது.

    இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட நொய்டா நிறுவனத்தின் இயக்குனர்களான கரண் சிங் குமார் மற்றும் அவரது சகோதரர் லாலு சிங் ஆகியோர் புவனேஸ்வர் நிதி நிறுவனத்தின் கியூ.ஆர். கோடுக்கு பதிலாக தங்களது நிறுவனத்தின் கியூ.ஆர் கோடை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டனர்.

    இந்த மோசடியின் மூலம் புவனேஸ்வர் நிறுவனத்துக்கு செல்ல வேண்டிய சுமார் ரூ.14 கோடியை நொய்டா நிறுவனத்தின் இயக்குனர்கள் சுருட்டினர்.

    புவனேஸ்வர் நிறுவனம் தங்களது வங்கி கணக்கின் இருப்பை பரிசோதித்தபோது தான் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து அந்த நிறுவனம் உடனடியாக இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தது.

    அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கியூ.ஆர். கோடை பயன்படுத்தி மோசடி நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நொய்டா நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான கரண் சிங் குமாரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த மோசடியில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போக்குவரத்து அதிகம் நிறைந்த கோவை மாநகரில் அரசு பஸ்சுக்கு நிகராக எண்ணற்ற தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • பஸ்களில் பயணிக்கும் பெரும்பாலான பயணிகள் சரியான சில்லறையை கொடுத்து விடுவார்கள். சிலரிடம் சில்லறை இருக்காது.

    கோவை:

    சில பல வருடங்களுக்கு முன்பு வரை கடைகள், ஓட்டல்கள், பெரிய அங்காடிகள் ஆகியவற்றிற்கு பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்கள் தங்கள் கைகளில் பணத்தை எடுத்து கொண்டு சென்று பொருட்கள் வாங்கி வந்தனர்.

    வங்கி கணக்கு வைத்திருக்கும் பலரும், வங்கிகளுக்கு சென்றே பணம் எடுப்பதும், பணம் போடுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தனர். தற்போது நாகரீகம் வளர, வளர அனைத்துமே டிஜிட்டல் மயமாகி விட்டது. பொதுமக்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே வங்கிகளில் பணம் போடுவது மற்றும் பணம் எடுப்பது உள்ளிட்டவற்றை செய்து விடுகின்றனர்.

    அதுபோன்று தற்போது ஓட்டல்கள், உணவகங்கள், கடைகள் உள்ளிட்டவற்றிக்கு செல்லும் பொதுமக்களில் பெரும்பாலானோர் கையில் பணத்தை எடுத்து செல்வது கிடையாது.

    கடையில் பொருட்களை வாங்கிவிட்டு, செல்போனில் உள்ள பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்ற செயலிகள் மூலமாக பணத்தை செலுத்தி வருகின்றனர். அனைத்து கடைகளிலும் இந்த வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் கடைக்காரர்களுக்கு சில்லரை மீதி கொடுப்பது போன்ற பிரச்சினைகள் வெகுவாக குறைந்துள்ளன.

    இதுவரை கடைகள், ஓட்டல்கள், வங்கிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த கியூஆர் கோர்டு வசதி இந்தியாவிலேயே முதல் முறையாக கோவையில் இயங்கி வரும் தனியார் பஸ் ஒன்றில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    போக்குவரத்து அதிகம் நிறைந்த கோவை மாநகரில் அரசு பஸ்சுக்கு நிகராக எண்ணற்ற தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களில் எப்போதும் கூட்டம் அலைமோதும்.

    பஸ்களில் பயணிக்கும் பெரும்பாலான பயணிகள் சரியான சில்லறையை கொடுத்து விடுவார்கள். சிலரிடம் சில்லறை இருக்காது. அப்படி கொடுப்பவர்களுக்கு, சில கண்டக்டர்கள் மீதி சில்லறையை கொடுத்து விடுவார்கள். சிலர் சரியான சில்லறை எடுத்து வர வேண்டியதானே என கடிந்து கொள்வதும் உண்டு. கடிந்து கொண்டாலும் சில்லறையை கொடுத்து விடுவார்கள்.

    இதனால் அனைத்து பஸ்களிலும் சில்லறை பிரச்சினை பெரும் பிரச்சினையாகவே இருக்கும். இதன் காரணமாக பல நேரங்களில் பெரிய அளவிலான தகராறுகள் கூட ஏற்பட்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

    அதற்கு எல்லாம் ஒரு தீர்வு காணும் விதமாக கோவையை சேர்ந்த தனியார் பஸ் நிறுவனம் ஒன்று பயணிகள் டிக்கெட் எடுக்க கியூஆர் கோர்டு வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் சார்பில் வடவள்ளி-ஒண்டிப்புதூர், ஒண்டிப்புதூர்-வடவள்ளி, சாய்பாபா காலனி, கீரணத்தம்-செல்வபுரம், மதுக்கரை-ஒண்டிப்புதூர் ஆகிய வழித்தடங்களில் 5 நகர பஸ்களை இயக்கி வருகிறது.

    இந்த 5 பஸ்களிலுமே பயணிகள் டிக்கெட் எடுப்பதற்கான கியூஆர் கோர்டு வசதியை அறிமுகம் செய்துள்ளனர். இதன் மூலம் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு எவ்வளவு டிக்கெட் என்பதை நடத்துனரிடம் கேட்டு, கியூஆர் கோடு மூலம் அந்த பணத்தை செலுத்தி கொண்டு தங்கள் பயணத்தை தொடரலாம்.

    3 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த திட்டமானது, அந்த பஸ்களில் பயணிக்க கூடிய பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் பெரும் பிரச்சினையான சில்லறை பிரச்சினை என்பது குறைந்து விட்டது.

    இதுகுறித்து தனியார் பஸ் நிறுவன உரிமையாளரான கார்த்திக் பாபு கூறியதாவது:-

    பஸ்களில் சில்லறை பிரச்சினை என்பது எப்போதும் வரக்கூடியது தான். இதற்காக என்ன செய்யலாம் என்று யோசித்த போது தான், கடைகளில் பொருட்களை வாங்கி விட்டு பணம் செலுத்துவதற்கு கியூஆர் கோடு வசதி உள்ளது போல பஸ்களிலும் அறிமுகப்படுத்தினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது.

    உடனே ஒரு சாப்ட்வேரை உருவாக்கி அதன் மூலம் புதிய கியூஆர் கோர்டு ஒன்றை செய்து, எங்கள் நிறுவனம் சார்பில் இயங்கும் 5 பஸ்களிலும் ஒட்டினோம்.

    இதனால் பஸ்சில் பயணிக்கும் பயணிகள் டிக்கெட்டுக்காக இனி கையில் காசு கொடுக்க வேண்டாம். பஸ்சில் உள்ள கியூஆர் கோர்டை பயன்படுத்தி டிக்கெட் பெற்று கொள்ளலாம். இவர்கள் பணம் செலுத்தியதற்கான குறுஞ்செய்தி கண்டக்டருக்கு சென்று விடும். இதற்கு என அவருக்கு ஒரு செயலி அவரது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுக்கான பணம் செலுத்தியவர்கள் அந்த மெசேஜை காண்பித்து டிக்கெட் பெற்று பயணிக்கலாம். இதன் மூலம் சில்லறை பிரச்சினை என்பது குறைந்துள்ளது.

    மேலும் நாங்கள் அறிமுகப்படுத்தி உள்ள இந்த கியூஆர் கோர்டு வசதிக்கு பயணிகளிடமும் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவையில் முதல் முறையாக தனியார் டவுன் பஸ்சில் டிக்கெட் எடுக்க கியூஆர் கோர்டு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பயணிகள், இதுபோன்ற மற்ற பஸ்களிலும் செய்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க அண்டை மாநிலமான கேரளா போன்று கம்ப்யூட்டர் பில் முறையை கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
    • சமீப காலங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்ட 1,967 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் உள்ளன. இதனை தடுக்க அவ்வப்போது டாஸ்மாக் அதிகாரிகள் கடைகளில் 'திடீர்' சோதனை மேற்கொண்டு விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் மது பானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க அண்டை மாநிலமான கேரளா போன்று கம்ப்யூட்டர் பில் முறையை கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    இது தொடர்பாக டாஸ்மாக் மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது, தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபான கடைகள் உள்ளன. மதுபானங்களுக்கு அதிக விலை நிர்ணயம் செய்வது குறித்து ஏராளமான புகார்கள் வருகின்றன. சமீப காலங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்ட 1,967 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இருந்தபோதிலும் இந்த பிரச்சினையை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது. அதனால் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கணினி மயமாக்கப்பட்ட பில்லிங் முறையை கொண்டுவர அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

    அதன்படி வாடிக்கையாளர்கள் மதுபானத்துக்கு உரிய தொகையை செலுத்தி முதல் கவுண்டரில் கணினி மயமாக்கப்பட்ட பில்களை பெற்றுக் கொள்வதற்கும், 2-வது கவுண்டரில் அந்த பில்லினை கொடுத்து மதுபானம் வாங்கிக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்படும்.

    மேலும் அனைத்து கடைகளிலும் கம்ப்யூட்டர் பில்லிங் முறைகளை கொண்டு வருவதா அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் முதலில் அமல்படுத்துவதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். கேரளாவில் கம்ப்யூட்டர் பில்லிங் முறை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

    இந்த முறையை ஆய்வு செய்ய அதிகாரிகள் குழுவை கேரளாவுக்கு அனுப்ப டாஸ்மாக் அதிகாரிகள் அரசிடம் அனுமதி கேட்க இருக்கிறார்கள் என்றார். மேலும் அவர் கூறுகையில், கடைகளில் பாயிண்ட் ஆப் சேல் மெஷின்களை பயன்படுத்த அனைத்து மேற்பார்வையாளர்களுக்கும் அறிவுறுத்தி இருக்கின்றோம்.

    நகரங்களில் உள்ள கடைகளில் எந்திரங்கள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளன. அதனை கிராமப்புறங்களில் விநியோகிக்கவும் முயற்சிகள் நடந்து வருகிறது. வருகிற ஜூன் மாத இறுதிக்குள் கியூ ஆர் குறியீடு மற்றும் கூகுள்பே போன்ற டிஜிட்டல் முறையில் தொகையை செலுத்தி மதுபானம் பெறுவதற்கான நடவடிக்கைகளிலும் டாஸ் மாக் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. இதனை இறுதி செய்ய வங்கிகளுடன் கலந்தாலோசித்து வருகிறோம் என்றார்.

    கம்ப்யூட்டர் பில் முறை மற்றும் டிஜிட்டல் வசதிகள் செயல்படுத்தப்படும் பட்சத்தில் பரிவர்த்தனைகளில் வெளிப்படை தன்மை மேம்படும். மேலும் அதிக விலைக்கு விற்பனை செய்வது தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அரசு திரும்ப பெறும் நிலையில் தனது திருமண அழைப்பிதழை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
    • காந்தி புகைப்படம் இடம்பெற்று இருக்கும் இடத்தில் விநாயகர், புதுமண தம்பதியை ஆசீர்வதிப்பது போன்றும் அச்சிட்டு இருந்தன.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கலசா தாலுகாவைச் சேர்ந்தவர் தேஜூ. கடந்த 2019-ம் ஆண்டு இவருக்கு திருமணம் ஆனது.

    அப்போது அவர் திருமண அழைப்பிதழை 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வடிவில் வெளியிட்டிருந்தார். தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அரசு திரும்ப பெறும் நிலையில் தனது திருமண அழைப்பிதழை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி உள்ளது. அந்த பத்திரிகை முழுக்க, முழுக்க 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வடிவில் உள்ளது.

    ரூபாய் நோட்டில் அதன் முகமதிப்பு அச்சிடப்பட்டு இருப்பது போலவே திருமணம் நடைபெற்ற ஆண்டு, ரூபாய் நோட்டுக்கான எண் வடிவில் திருமண தேதி, ரிசர்வ் வங்கியின் பெயர் அச்சிடப்பட்டு இருக்கும் இடத்தில் 'லவ் பேங் ஆப் லைப்' என்றும், ரூபாய் நோட்டில் இடம்பெற்று இருக்கும் பிற அம்சங்களைப் போல் திருமண தகவல்களை அச்சிட்டு இருந்தனர்.

    மேலும் காந்தி புகைப்படம் இடம்பெற்று இருக்கும் இடத்தில் விநாயகர், புதுமண தம்பதியை ஆசீர்வதிப்பது போன்றும் அச்சிட்டு இருந்தன. மேலும் அதில் ஒரு கியூ-ஆர் கோடையும் அச்சிட்டு இருந்தனர். அதை ஸ்கேன் செய்தால் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து திருமணம் நடைபெறும் மண்டபத்திற்கு செல்வதற்கான வழியை கூகுள் மேப் காட்டிவிடும்.

    தேஜு இந்த அழைப்பிதழை உடுப்பியில் உள்ள தனது நண்பர் மூலமாக டிசைன் செய்து அச்சிட்டு இருக்கிறார். தற்போது அதை பலரும் பார்த்து ரசிப்பது டிரண்ட் ஆகி உள்ளது.

    • மலர் கண்காட்சிக்காக பேன்சி , டெல்பினியம், மேரி கோல்ட் , கேலண்டுல்லா, சால்வியா உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்கள் நடவு செய்யப்பட்டுள்ளது.
    • மலர்களின் பெயர்களை கண்டறிய கியூ ஆர் கோடு அந்தந்த மலர்களின் பெயர் பலகைகளில் ஒட்டப்பட்டு ள்ளது .

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் உலகளாவிய முக்கிய சுற்றுலா இடமாக இருந்து வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறு இடங்கள், பொழுது போக்கு அம்சங்கள் இருந்து வருகிறது.

    இதில் கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா சுற்றுலா பயணிகளை கவருவதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது . தற்போது சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறு வகையிலான பல லட்சம் மலர்கள் பூத்துக் குலுங்குகிறது. மே மாத சீசன் ஆரம்பித்து உள்ள நிலையில் மலர் கண்காட்சிக்காக பேன்சி , டெல்பினியம், மேரி கோல்ட் , கேலண்டுல்லா, சால்வியா உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்கள் நடவு செய்யப்பட்டு கண்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் பூத்துக் குலுங்குகிறது.

    இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மலர்களின் பெயர்களை கண்டறிய கியூ ஆர் கோடு அந்தந்த மலர்களின் பெயர் பலகைகளில் ஒட்டப்பட்டு ள்ளது . இதனை சுற்றுலாப் பயணிகள் தங்களது செல்போன்களில் ஸ்கேன் செய்வதன் மூலமாக பூக்களின் விபரங்கள் மற்றும் அதன் குடும்ப வகைகள், எந்த சமயங்களில் இவை பூக்கும் என்பது உள்ளிட்ட முழு விபரமும் அறிந்து கொள்ளும் வகை யில் தயார் செய்யப்பட்டு ள்ளது.

    இதன் மூலம் சுற்றுலா பயணிகள் எளிதாக பூக்களின் பெயர்களை கண்டறியலாம் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • க்யூ ஆர் கோடு செயலி மூலம் ஆட்டோக்களை இயக்க கருத்து கேட்பு கூட்டம் தஞ்சையில் நடை பெற்றது.
    • தஞ்சாவூரில் 3 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்கி வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் க்யூ ஆர் கோடு செயலி மூலம் ஆட்டோ க்களை இயக்க கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் தஞ்சாவூர் மாநகரில் க்யூ ஆர் கோடை பயன்படுத்தி புதிய செல்போன் செயலி மூலம் ஆட்டோக்களை இயக்குவது தொடர்பாக "ஊர் கேப்ஸ்" என்ற நிறுவனத்தின் சார்பில் அதன் நிர்வாகி மரிய ஆண்டனி பேசியதாவது:

    தொழில் நுட்பங்கள் வளர்ந்து வரும் நிலையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிலையான வருமானமும், பயணிகளுக்கு பாதுகாப்பான பயணமும் அதே நேரத்தில் இருவரும் பேரம் பேசாமல் உரிய கட்டணத்தில் இயக்க ஊர் கேப்ஸ் என்ற தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் க்யூ ஆர் கோடு மூலம் ஸ்மார்ட் போனில் புதிய செயலியில் ஆட்டோக்களை இயக்க முன் வந்துள்ளது.

    கோவையில் இந்த திட்டம் கடந்த 80 நாட்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதே போல் தஞ்சாவூர் மாநகரிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த ஆட்டோ ஓட்டுநர்களின் ஒத்துழைப்பு தேவை என பேசினார்.

    இதற்கு ஆட்டோ ஓட்டுநர்கள் கூறுகையில்: தஞ்சாவூரில் 3 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்கி வருகிறது.

    தற்போது நாங்கள் சில பேர் மட்டுமே இந்த கூட்டத்துக்கு வந்துள்ளோம்.

    எனவே எல்லா ஆட்டோ ஓட்டுநர்களிடமும் இந்த திட்டம் தொடர்பாக கலந்து பேசி விரைவில் அதற்கான முடிவை தெரிவிக்கிறோம் என்றனர்.

    • நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 64 ரேஷன் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
    • தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கும் திட்டமும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், குந்தா, கோத்தகிரி, பந்தலூர் ஆகிய 6 தாலுகாக்கள் உள்ளன.

    இந்த தாலுகாக்களில் கூட்டுறவுத்துறை சார்பில் 335 ரேஷன் கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கட்டுப்பாட்டில் 28 கடைகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், எஸ்டேட் நிர்வாகத்தால் நடத்தப்படும் கடைகள் என மொத்தம் 404 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன.

    தரமான சேவை வழங்கி வரும் ரேஷன் கடைகளுக்கு சர்வதேச தரச்சான்று பெற தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

    இதன்படி தொழிலின் தரத்தை வெளிப்படுத்தும் வகையில் ஐ.எஸ்.ஓ. 9001 மற்றும் பாதுகாப்பு மேலாண்மை வினியோகத்தின் சிறந்த செயல்பாட்டுக்கான ஐ.எஸ்.ஓ. 28000 என 2 வகையான தரச்சான்று பெற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    அதன்படி நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 64 ரேஷன் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கேஷ் பஜார், மினி சூப்பர் மார்க்கெட், வண்டிப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, அப்பர் குன்னூரில் 2 கடைகள், ஓட்டுப்பட்டறை, வசம்பள்ளம், வெலிங்டன், ஜெயந்தி நகர், கூர்க்கா கேம்ப், ஊட்டி மார்க்கெட் போஸ்-1, காந்தல்-2, பிங்கர் போஸ்ட் பகுதிகளில் இயங்கும் ரேஷன் கடைகள் என மொத்தம் 60 கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. 9001:2015 தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

    முத்ததோரை, தாய்சோலை, தூனேரி, எல்லக்கண்டி ஆகிய 4 ரேஷன் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. 28000:2022 தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    கியூஆர் கோடு முறையில் பணம் செலுத்தும் வசதி நீலகிரி மாவட்டத்தில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கும் திட்டமும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுப்பதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாக புகார்கள் எழுந்தன.
    • நீண்ட வரிசையில் காத்து நிற்பது, பெரும்பாலான ரெயில் நிலையங்களில் ஊழியர்கள் பற்றாக்குறையால் பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    சென்னை:

    நவீன தகவல் தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சியின் காரணமாக அனைத்து தொழில் சார்ந்த நடவடிக்கைகளும் வங்கியின் மூலமே பணபரிமாற்றம் செய்யப்படுகிறது.

    கையில் ரொக்கமாக செலுத்துவதற்கு பதிலாக 'கூகுள் பே', 'போன் பே' போன்றவற்றின் வழியாக பண பரிமாற்ற செயலி (யு.பி.ஐ.) மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

    ஓட்டல், டீ கடை, சிறிய பெட்டி கடைகளுக்கு கூட தற்போது யு.பி.ஐ.யை பயன்படுத்தி பணத்தை புழங்குவது அதிகரித்து வருகிறது.

    முன்பதிவு டிக்கெட் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றை பயன்படுத்தி எடுப்பதுபோல முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை யு.பி.ஐ. மூலம் பெறும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது. தற்போது ரெயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம் மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட் பெறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

    'ஸ்மார்ட் கார்டு' மூலம் ரீ சார்ஜ் வசதியுடன் இந்த வசதி பயணிகளுக்கு அளிக்கப்படுகிறது. இதனை மேம்படுத்தும் வகையில் யு.பி.ஐ. செயலி மூலம் டிக்கெட் பெறுவதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.

    சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுப்பதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாக புகார்கள் எழுந்தன.

    நீண்ட வரிசையில் காத்து நிற்பது, பெரும்பாலான ரெயில் நிலையங்களில் ஊழியர்கள் பற்றாக்குறையால் பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுப்பதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வரும் பயணிகளுக்கு யு.பி.ஐ. செயலி மூலம் எளிதாகவும், விரைவாகவும் டிக்கெட் எடுக்க முடியும் என்ற அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    பயணிகள் தங்களிடம் உள்ள ஸ்மார்ட் போன் மூலம் யு.பி.ஐ. செயலி வழியாக டிக்கெட் பெற முடியும். தெற்கு ரெயில்வே 6 கோட்டங்களில் 254 தானியங்கி டிக்கெட் எந்திரங்களில் இந்த வசதியை மேம்படுத்துகிறது.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    தானியங்கி டிக்கெட் வாங்கும் எந்திரத்தில் உள்ள திரையில் பயணி எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என தேர்வு செய்த பிறகு அதற்கான கட்டணத்தை யு.பி.ஐ. செயலி அல்லது கியூ.ஆர்.கோடு மூலம் எளிதாக செலுத்தலாம்.

    இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டதும் ஸ்மார்ட் கார்டையும் பயணிகள் தொடர்ந்து பயன்படுத்தலாம். புறநகர் மின்சார ரெயில், எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் ரெயில்களில் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்ய இந்த வசதியை பயன்படுத்தலாம்.

    மொத்தம் உள்ள 254 எந்திரங்களில் சென்னை டிவிசனில் மட்டும் 96 எந்திரங்களில் இந்த வசதி மேம்படுத்தப்படுகிறது. திருச்சியில் 12, மதுரை-46, சேலம்-12, திருவனந்தபுரம்-50, பாலக்கோடு டிவிசனில் 38 என அமைக்கப்படுகிறது.

    டிக்கெட் தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பிரிண்ட் செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×