என் மலர்
நீங்கள் தேடியது "8 LAKHS"
- குழந்தை இறப்பு சம்பவத்தில் தந்தைக்கு ரூ.8 லட்சம் நஷ்ட ஈடு வழங்க கோர்ட் உத்தரவிட்டது
- 45 நாட்களுக்குள் வழங்கவேண்டும்
பெரம்பலூர்:
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள கொடிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் தவசி மகன் ராஜா . இவரது ஒரு வயது குழந்தையான சந்தோஷ்க்கு சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் பிரச்சனைக்காக பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையை அனுகியுள்ளார். அப்போது குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் குழந்தைக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என கூறினர். இதையடுதது அறுவை சிகிச்சை செய்யயும் முன் எல்லா பரிசோதனைகளும் செய்யப்பட்டு குழந்தை சந்தோஷ்க்கு கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி 30ம்தேதி அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சை செய்யும் முன் மயக்க மருந்து நிபுணர்களின் தவறான சிகிச்சையால் அதாவது மருந்தால் தூண்டப்பட்ட மூச்சுதிணறல் ஏற்பட்டு குழந்தை இறந்தது.
ஆனால் மருத்துவமனை நிர்வாகம் குழந்தை இறந்ததை போலீசுக்கு தெரிவிக்காமல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பாமல் குழந்தை பெற்றோரிடம் இயற்கையாக இறந்துவிட்டது என கூறி இயற்கை மரணம் என தவறான இறப்பு சான்றிதழ் கொடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவிட்டனர். இதை நம்பிய பெற்றோர் உடலை பெற்று கொண்டு அடக்கம் செய்துவிட்டனர். இந்த குழந்தை இயற்கையான இறப்பு என நகராட்சியும் சான்றிதழ் கொடுத்துள்ளது.
பின்னர் சிறிய அறுவை சிகிச்சை என்பதால் இயற்கையான மரணம் ஏற்பட வாய்ப்பில்லை, மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தான் குழந்தை இறந்திருக்கும் என சந்தேகமடைந்த குழந்தையின் தந்தை ராஜா, தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுத்து நஷ்டஈடு பெற்றுத்தரக்கோரி கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதம் 3ம்தேதி பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தவறான மருத்துவ சிகிச்சையால் தான் குழந்தை இறந்தது என கண்டறியப்பட்டதால் குழந்தையின் தந்தைக்கு நஷ்ட ஈடாக ரூ.7 லட்சத்து 50 ஆயிரமும், மருத்துவம் மற்றும் இதர செலவுக்ககாக ரூ.50 ஆயிரமும், வழக்கு செலவு தொகையாக ரூ 10 ஆயிரம் என மொத்தம் 8 லட்சத்து 10 ஆயிரம் தொகையை மருத்துவமனை நிர்வாகம் 45 நாட்களுக்குள் வழங்கவேண்டும், இல்லையென்றால் தீர்ப்பு வழங்கப்பட்ட தேதியிலிருந்து 9 சதவீத வட்டியுடன் தொகையை வழங்கவேண்டும் என உத்தரவிட்டார்.






