search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "64"

    • வங்கி கணக்கு முடக்கம் செய்யப்ப ட்டுள்ள தாகவும்,லிங்கை தொடர்புகொண்டு அப்டேட் செய்யும்படி எஸ்.எம்.எஸ். வந்துள்ளது.
    • வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 64 ஆயிரத்து 538 எடுக்கப்பட்டதாக எஸ்.எம்.எஸ். வந்தது.

    சேலம்:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் திலக்நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கியிருந்த அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த தீவிரவாதி அக்தர் உசேன் என்பவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். பின்னர் அவரை தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி 10 நாட்கள் காவலில் எடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய மேற்கு வங்கத்தை சேர்ந்த அப்துல் அலிமுல்லா (வயது 20) சேலத்தில் பதுங்கி இருப்பதும், அவர் சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த சுரேஷ் (40) என்பவர் நடத்தி வரும் எருமாபாளையம் குட்டப்பன்காட்டில் உள்ள துணி உற்பத்தி நிறுவனத்தில் (கார்மெண்ட்ஸ்) வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார், சேலத்திற்கு வந்து அப்துல் அலிமுல்லாவை கைது செய்தனர். மேலும் அவருடன் வேலை பார்த்த மேற்கு வங்கத்தை சேர்ந்த 12-க்கும் மேற்பட்டோரிடம் சிறப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.சேலத்தில் பிடிபட்ட அப்துல் அலி முல்லா சமூக வலைதளங்கள் மூலம் தீவிரவாத தாக்குதல் காட்சிகள் உள்பட பல்வேறு புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்துள்ளார். இந்த நிலையில் அவரை 10 நாட்கள் காவலில் எடுத்துள்ள பெங்களூரு போலீசார், அப்துல் அலி முல்லாவை சேலம் அழைத்து வந்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

    சேலத்தில் புதியதாக வேலைக்கு வரும் வெளிமாநிலத்தவர்கள் குறித்த தகவலை அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் தெரிவிக்குமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    • தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • மெகா தடுப்பூசி முகாமில் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை மட்டும் 2, 213 பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 34 ஆயிரத்து 566 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 27 ஆயிரத்து 626 பேரும் என மொத்தம் 64,405 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் அலையை தடுக்கும் வகையில் நேற்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. அதன்படி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் , அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடந்தது.

    இந்த முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதே போல் 18 வயதுக்கு மேற்பட்ட இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டது. மாவட்டத்தில்

    1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியாளர்கள் ஈடுபட்டனர். 70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட்டது. நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை மட்டும் 2, 213 பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 34 ஆயிரத்து 566 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 27 ஆயிரத்து 626 பேரும் என மொத்தம் 64,405 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    ×