search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 pound chain snatched"

    • கவிதா பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றார்.
    • கவிதா படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

     கோவை

    கோவை கோவில்பாளை யம் அருேக உள்ள செரயாம்பாளை யத்தை சேர்ந்தவர் நடராஜ். இவரது மனைவி கவிதா (வயது 42).

    சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் மளிகை கடையில் பொருட்கள் வாங்குவதற்காக சென்றார். மொபட் வெள்ளானைப்பட்டி - செரயம்பாளையம் ரோட்டில் பாரதி அவென்யூ அருகே சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது கவிதாவை மற்றொரு மொபட்டில் பின் தொடர்ந்து சென்ற வாலிபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.

    இதில் மொபட்டில் இருந்து தவறி கீழே விழுந்த கவிதா படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு காளப்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கவிதாவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மொபட்டில் பின் தொடர்ந்து பெண்ணிடம் 5 பவுன் செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள். 

    ×