search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 people imprisoned"

    பொள்ளாச்சியில் போலி பீடி விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி பிரபல தனியார் நிறுவன பீடிகள் தென் மாவட்டங்களில் இருந்து போலியாக தயாரிக்கப்பட்டு அதிக அளவில் விற்பனை செய்து வருவதாக தனியார் பீடி கம்பெனி ஏஜண்ட் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியதில், பொள்ளாச்சி ராஜாமில் சாலையில் செயல்பட்டு வரும் மளிகை கடை உரிமையாளர் மந்திர மூர்த்திக்கு(52) தொடர்பு இருப்பது தெரிந்தது.

    மந்திரமூர்த்தியிடன் விசாரணை நடத்தியதில், தென்காசி, தூத்துக்குடி பகுதிகளில் இருந்து தனியார் பேருந்து மூலமாக போலி பீடிகளை கொண்டு வந்து பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் சிவக்குமார்(42), ரமேஷ்(25), சிவா(24), ஹரிகிருஷ்ணன்(76) ஆகியோர் விற்பனை செய்துள்ளனர்.இதையடுத்து மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்து நீதிமன்றம் 2ல் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews
    ×