search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4.26 lakh ration card"

    • தேனி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பினை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
    • பெரியகுளம் கூட்டுறவு பண்டகசாலைக்குட்பட்ட 57 ரேசன்கடைகளில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டத்தில் கலெக்டர் முரளிதரன் தேனி – அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட தேனி வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில், தலா 1 கிலோ பச்சரிசி 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஒன்று மற்றும் ரூபாய் 1000 ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு தொகு ப்பினை அரிசி குடும்ப அட்டைதாரர்க ளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

    தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி வட்டத்தி ற்குட்பட்ட 79,781 குடும்ப அட்டைதாரர்களுக்கும், போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட 64,299 குடும்ப அட்டைதாரர்களு க்கும், பெரியகுளம் வட்டத்தி ற்குட்பட்ட 71,820 குடும்ப அட்டைதாரர்களுக்கும், தேனி வட்டத்திற்குட்பட்ட 65,392 குடும்ப அட்டை தாரர்களுக்கும், உத்தம பாளையம் வட்டத்தி ற்குட்பட்ட 1,45,580 குடும்ப அட்டைதாரர்க ளுக்கும் என மொத்தம் 4,26,872 குடும்ப அட்டைதாரர்க ளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக குடும்ப அட்டைதாரருக்கு தலா 1 கிலோ பச்சரிசி அரிசி 1 கிலோ சக்கரை, முழு கரும்பு ஒன்று மற்றும் ரூபாய் 1000 ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படவுள்ளது.

    இப்பரிசுத்தொகு ப்பினை குடும்ப அட்டை தாரர்கள் வருகிற 12-ந்தேதி வரை குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்க ப்பட்டுள்ள டோக்கன் குறிப்பிட ப்பட்டுள்ள நாளில் நியாய விலைக்கடை யில் பெற்றுக் கொள்ளலாம். டோக்கனில் குறிப்பிட்ட நாளில் பெற இயலாதவர்கள் 13.01.2023 அன்று பெற்றுக் கொள்ளும் பொருட்டு, நியாய விலைக்கடை செயல்பட உத்தரவிடப்பட்டு ள்ளது.

    இந்நிகழ்வின் போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார், துணைப்பதிவாளர் (பெரியகுளம்) ராஜாங்கம், துணைப்பதிவாளர் (பொது விநியோகத்திட்டம்) சேகர், தேனி-அல்லிநகரம் நகராட்சி நகர்மன்ற த்தலைவர்ரேணுப்பிரியா, தேனி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர்சக்கரவர்த்தி, நகர்மன்ற துணைத்தலைவர் செல்லம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பெரி யகுளம் கூட்டுறவு பண்டகசாலைக்குட்பட்ட 57 ரேசன்கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நேற்று தொடங்கியது. அப்போது 4 ரேசன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவ தாக புகார் எழுந்தது. இதனைதொடர்ந்து அந்த கடைகளுக்கு நேரடியாக வந்த மாவட்ட கலெக்டர் முரளிதரன் பொருட்களை தரமாக வழங்க உத்தர விட்டார். இந்த ஆய்வின் போது வட்டவழங்கல் அலுவலர், பெரியகுளம் தாசில்தார் உள்பட அதிகாரி கள் கலந்து கொண்டனர்.

    ×