என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 people Stones fell injury"

    • பணிகளுக்காக செங்கல், மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை பணியாளர்கள் யானைப்பாதை வழியாக தள்ளுவண்டியில் கொண்டு சென்றனர்.
    • தள்ளுவண்டி கட்டுப்பாட்டை இழந்து உருண்டு ஓடியதில் யானைப்பதை வழியாக மலைக்கோவிலுக்கு சாமி தசரினம் செய்ய சென்று கொண்டிருந்த 4 பேர் மீது கற்கள் விழுந்து காயம் அடைந்தனர்.

    பழனி:

    பழனி மலை முருகன் கோவிலில் ஜனவரி 27ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி மலைக் ேகாவிலுக்கு செல்லும் பாதை, யானைப்பாதையில் உள்ள மண்டபங்கள் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஏராளமான பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சிறிய தள்ளுவண்டியில் இந்த பணிகளுக்காக செங்கல், மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை பணியாளர்கள் யானைப்பாதை வழியாக கொண்டு சென்றனர்.

    அப்போது தள்ளுவண்டி கட்டுப்பாட்டை இழந்து உருண்டு ஓடியது. இதில் யானைப்பதை வழியாக மலைக்கோவிலுக்கு சாமி தசரினம் செய்ய சென்று கொண்டிருந்த ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகில் உள்ள மந்திரிபாளையத்தை சேர்ந்த சிதம்பரம் (வயது37), அவரது மகன் ரோகித் ( வயது8), சேலத்தை சேர்ந்த இருவர் என மொத்தம் 4 பேர் மீது தள்ளுவண்டியில் இருந்த கற்கள் விழுந்தது. இதில் அவர்கள் 4 பேரும் காயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் பழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பினர்.

    இது குறித்து அடிவாரம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    ×