என் மலர்
நீங்கள் தேடியது "'4-G' service"
- வேகம் மற்றும் தரம் 4 முதல் 5 மடங்கு அதிகரிக்கும்
- பொது மேலாளர் தகவல்
வேலூர்:
மத்திய அரசின் 'ஆத்ம நிர்பார் பாரத்' முயற்சியின் கீழ், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட '4ஜி' தொழில்நுட்ப மொபைல் நெட்வொர்க் வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவண்ணா மலை மாவட்டங்களில் '4ஜி' சேவை செயல்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம், இப்போதைய நெட்வொர்க்கின் டேட்டா வேகம் மற்றும் தரம், வரும் நாட்களில் 4 முதல் 5 மடங்கு அதிகரிக்கும்.
இந்த தொழில்நுட் பத்தை செயல்படுத்தும் வகையில், மேற்குறிப் பிட்ட மாவட்டங்களில் 450 டவர்களும்,மேம்படுத் தப்பட்ட 4ஜி டவர்களாக மாற்றப்படுகிறது. இதன் மூலம், எல்லா டவர்களும் '5ஜி' திறன் கொண்டதாக இருக்கும். மேலும், மென்பொருள் மேம்படுத் துதல் மூலம் '5ஜி'க்கு எளிதாக மாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
4ஜி சிம்கார்டுகள்
மேலும், வேலுார், ராணிப்பேட்டை, திருப் பத்துார், திருவண்ணாமலை, மாவட்டங்களில் கூடுதலாக 28 இடங்களில் '4ஜி' டவர்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த மாவட்டங்களில் பி.எஸ்.என்.எல் மொபைல் கவரேஜ் மேம்படும்.
மேலும், வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இப்போது '2ஜி' மற்றும் '3ஜி' சிம் கார்டு வைத்திருக்கும் வாடிக்கை யாளர்கள், அருகிலுள்ள பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர் சேவை மையங்கள், பிரான்சைசி அலுவலகங்கள் மற்றும் மேளா நடக்கும் இடங்களில், கட்ட ணமின்றி இலவசமாக '4ஜி' சிம் கார்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்.
மேலும், வாடிக்கையா ளர்கள் தங்கள் சிம் கார்டு களை '4ஜி' சிம் கார்டு களாக மாற்றிக்கொ ள்ள வசதியாக, வேலுர் வணிக பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல் வாடிக்கை யாளர் சேவை மையங்கள் இந்த மாதம் எல்லா ஞாயிற்றுக் கிழமை களிலும் செயல்படும்.
இவ்வாறு பிஎஸ்என்எல் முதன்மை பொது மேலாளர் ஸ்ரீகுமார் வெளியிட் டுள்ள செய்திக்கு றிப்பில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.






