search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 acres"

    • 4 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மரவள்ளிக்கிழங்கு
    • மரவள்ளி கிழங்கு முழுவதும் எரிந்து.

    கடலூர்:

    கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடி டி. பாளையத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 52). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணியனுக்கும் முன்விரோத தகராறு இருந்து வருகிறது. இந்த முன் விரோதம் காரணமாக ஜெயராமனுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மரவள்ளிக்கிழங்குவை, சம்பவத்தன்று சுப்பிரமணியன் பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டதாக கூறப்படுகிறது.

    இதில் 4 ஏக்கர் மரவள்ளி கிழங்கு முழுவதும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு சுமார் 3 லட்சம் ஆகும். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் சுப்பிரமணியன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×