என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "36 cameras"
- கமிஷனர் ஆய்வு
- கூடுதலாக காவலர்கள் நியமனம்
வேலூர்:
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கூடுதலாக 36 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் தெரிவித்தார்.
வேலூர் புதிய பஸ் நிலையம் சுமார் ரூ.52 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இங்கு தற்போது சென்னை, அரக்கோணம் மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையம் சுத்தம் இல்லாமல் இருப்பதாகவும், இரவு நேரத்தில் மர்மநபர்கள் மது அருந்துவதாகவும் புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது பஸ் நிலையத்தின் உள்ள கழிவறையில் கண்ணாடி உடைந்திருந்தது தெரியவந்தது. அதை மாற்றவும், டெர்மினல் கட்டிடத்தில் உள்ள கழிவறைகளை பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
வேலூர் புதிய பஸ் நிலையம் தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் கழிவறைகள் சுத்தமாக வைக்கவும், இதுவரை பயன்படுத்தாமல் இருந்த கழிவறையை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தூய்மைப் பணி மேற்கொள்வதற்காக கூடுதலாக பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
தற்போது 3 ஷிப்டுகளாக 3 காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இதையடுத்து கூடுதலாக 3 காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இனி ஒரு ஷிப்டுக்கு இருவர் பணியில் இருப்பார்கள். பஸ் நிலையப் பகுதியில் சிறுநீர் கழித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது பஸ் நிலைய வளாகப் பகுதியில் 16 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளது. கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில் கூடுதலாக 36 கண்காணிப்பு கேமராக்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பொருத்தப்பட உள்ளது.
பஸ் நிலையம் இந்த வார இறுதிக்குள் முழுமையாக பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்