search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "331 arrested"

    • பள்ளி பேருந்துகள், கட்டிடங்கள் முக்கிய ஆவணங்கள், உள்ளிட்ட, அனைத்து பொருட்களும் சேதம் அடைந்தது.
    • போட்டோ, வீடியோக்களை ஆதாரங்களை கொண்டு கைது செய்து வரும் சிறப்பு புலனாய் குழு போலீசார் மேலும் கைது நடவடிக்கை தொடர்ந்து என அறிவித்துள்ளனர்

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில கடந்த மாதம் 13-ந் தேதி அன்று மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீமதி மாணவிக்கு நீதி கேட்டு மாணவியின் பெற்றோர் தரப்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று. அது 17ஆம் தேதி அன்று மிகப்பெரிய ஒரு வன்முறையாக மாறியது. இதில் பள்ளி பேருந்துகள், கட்டிடங்கள் முக்கிய ஆவணங்கள், உள்ளிட்ட, அனைத்து பொருட்களும் சேதம் அடைத்தது. வன்முறையில் ஈடுபட்டவர்களை பிடிக்க சிறப்பு புலனாய் குழு அமைத்து வன்முறையில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.

    இதில் பள்ளி கட்டிடங்களையும், சான்றிதழ்களையும், பேருந்துகளையும் சேதப்படுத்தியவர்களை நேற்று முன் தினம் வரை 327 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பேருந்துக்கு தீ வைத்ததாகவும் பள்ளி சொத்துகளை சேதப்படுத்தியதாகவும் பஸ் மீது கல் இருந்ததாகவும் போட்டோ, வீடியோ ஆதாரங்களை வைத்து கள்ளக்குறிச்சியை சேர்ந்த சந்தோஷ் (வயது 22), சங்கராபுரத்தை சேர்ந்த நவீன்குமார், (வயது 21) சின்னசேலத்தை சேர்ந்த மணிவர்மா (வயது 21), உளுந்தூர்பேட்டை சேர்ந்த முருகன் வயது 20, மேலும் நான்கு பேரை நேற்று கைது செய்தனர். இதனால் கைது எண்ணிக்கை 331 ஆக உயர்ந்தது. போட்டோ, வீடியோக்களை ஆதாரங்களை கொண்டு கைது செய்து வரும் சிறப்பு புலனாய் குழு போலீசார் மேலும் கைது நடவடிக்கை தொடர்ந்து என அறிவித்துள்ளனர்.

    ×