search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 year old girl"

    பீகாரில் 110 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்புக்குழுவினர் இன்று பத்திரமாக உயிருடன் மீட்டனர். #ChildFellBorewell #Bihar
    பாட்னா:

    பொதுமக்கள் பயன்படுத்தப்படாமல் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூடாமல் அப்படியே விட்டு விடுவதால் அதில் குழந்தைகள் தவறி விழுந்து உயிரிழக்க நேரிடுகிறது. இதுகுறித்து தொடர்ந்து அறிவுறுத்தியும் சிலர் அதனை அஜாக்கிரதையாக விட்டுவிடுகின்றனர்.

    இதேபோல், பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 3 வயது பெண் குழந்தை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, திறந்து கிடந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டது.

    தகவலறிந்த கோட்வாலி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து  மீட்பு பணியில் ஈடுபட்டனர். 110 அடி ஆழம் கொண்ட அந்த ஆழ்துளை கிணற்றில் பக்கவாட்டில் பொக்லைன் எந்திரம் மூலம் பெரிய பள்ளம் தோண்டி குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. 

    இந்நிலையில், தொடர்ந்து 26 மணி நேரமாக நடைபெற்ற மீட்பு பணிகளால் இன்று மாலை அந்த பெண் குழந்தை உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டது என போலீசார் தெரிவித்தனர். #ChildFellBorewell #Bihar
    ×