search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 times increase"

    பூக்களின் விலை கிலோவிற்கு ரூ.1,000 வரை உயர்ந்துவிட்டது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிபுலியூர் பஸ் நிலையம் அருகில் பூவிற்கு என தனியாக பெரிய அளவிலான மார்க்கெட் உள்ளது. இங்கு மல்லிகை, அரும்பு, காக்கட்டான், கனகாம்பரம், ரோஜப்பூ, கோழிக்கொண்டை, சாமந்தி போன்ற பல்வேறு பூக்கள் சில்லரையிலும், கட்டியும் விற்கப்படுகிறது.வேலை நிமித்தமாக கடலூருக்கு வரும் அனைவருமே இங்கு வந்து பூக்களை வாங்கி செல்வர்.

    இதுதவிர, கடலூரைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதியைச் சேர்ந்த பூக்கடை வைத்திருப்பவர்களும் இங்கு வந்து பூவை வாங்கி சென்று கட்டி விற்பனை செய்வார்கள்.

    குறிப்பாக கனகாம்பரம், காக்கட்டான், ரோஜாப்பூ, அரும்பு, மல்லிகை வகைகள் என பல்வேறு வகையான பூக்கள் தேனி, கம்பம், மதுரை, கர்னாடகா போன்ற பிற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தே வருகிறது. கோழிக்கொண்டை, சாமந்தி போன்ற சிலவகை பூக்கள் மட்டுமே கடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வாங்கப்படுகிறது.

    கடலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விளை நிலங்களில் நெல், கரும்பு, மரவள்ளி போன்ற உணவிற்கான விவசாய பயிர்கள் மட்டுமே அதிகளவில் பயிரிடப்படுகிறது.

    விவசாயிகளில் மிக குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர்களே பூ போன்ற மாற்று விவசாயத்தில் ஈடுபடுகின்னர். இதனால் அனைத்து வகையான பூக்களுமே வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தே வாங்கி விற்கப்படுகிறது.

    இன்று காலை பூக்களின் விலை கிலோவிற்கு ரூ.1,000 வரை உயர்ந்துவிட்டது. அதாவது நேற்று வரை 

    ×