என் மலர்
நீங்கள் தேடியது "3 Ganja selling persons arrested"
- கஞ்சா விற்பதாக வந்த தகவலையடுத்து கம்பம் வடக்கு போலீசார் ரோந்து சென்றனர்.
- கஞ்சாவை பறிமுதல் செய்து விற்றவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கம்பம்:
கம்பத்தை சேர்ந்தவர் பரமேஸ்வரன்(30). இவர் நாககன்னியம்மன் கோவில் அருகே கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தார். அப்போது ரோந்து சென்ற கம்பம் வடக்கு போலீசார் பரமேஸ்வரனை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் வாரச்சந்தை அருகே கஞ்சா விற்பனை செய்த பிரதாப்(30) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த கஞ்சா மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. தேனி க.விலக்கு போலீசார் முத்தனம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு கஞ்சா விற்ற கருப்பாயி(52) என்பவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






