என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "28 lakh 20 thousand rupees fraud"

    • சீட்டு பண மோசடியில் நடவடிக்கை
    • குடியாத்தத்தில் பரபரப்பு

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஓட்டல்களை நடத்தி வருபவர் பி.சரவணன் வயது 38 இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேலூர் மாவட்ட நிர்வாகியாக உள்ளார். இவரை நேற்று கர்நாடக மாநிலம் பெங்களூர் போலீசார் சீட்டுப்பணம் மோசடியில் கைது செய்தனர்.அப்போது கைது செய்த வந்த போலீசாரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடகா போலீசார் மற்றும் தமிழக போலீசார் கூறியதாவது:-

    தற்போது குடியாத்தம்-சித்தூர் சாலையில் பாக்கம் கிராமம் அருகே உள்ள குருராஜா நகரில் வசித்து வருபவர் பி.சரவணன் வயது 38 முன்னாள் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் இவர் குடியாத்தத்தில் ஓட்டல்களை நடத்தி வருகிறார். மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேலூர் மாவட்ட நிர்வாகியாக உள்ளார். சரவணன் மனைவி ஜெயப்பிரியா மற்றும் உறவினர்கள் விஜயலட்சுமி, ராகவேந்திரா ஆகியோர் சில வருடங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் பெங்களூர் அடுத்த எலங்கா பகுதியில் சீட்டு நடத்தி பணம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் பெங்களூரில் அடுத்த எலங்காடவுன் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு சரவணன் அவரது மனைவி ஜெயப்பிரியா உறவினர்கள் விஜயலட்சுமி, ராகவேந்திரா ஆகியோர் மீது ஒரு கோடியே 28 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்கு சம்பந்தமாக நேற்று காலையில் சரவணனை குருராஜா நகரில் உள்ள அவர் வீட்டில் வைத்து பெங்களூர் போலீசார் கைது செய்ய வந்துள்ளனர். அப்போது மப்டியில் இருந்த பெ போலீசாரை கண்டவு டன் சரவணன் தன்னை சிலர் கடத்திச் செல்ல வந்து ள்ளதாக கூச்சலி ட்டு ெள்ளார். கூச்சல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் திரண்டு வந்து சரவணன் உடன் சேர்ந்து மப்டியில் இருந்த பெங்களூர் போலீசாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பெங்களூர் போலீசார் தங்களை காத்துக் கொள்ள கொண்டு வந்த கை துப்பாக்கியை காட்டியுள்ளனர்.

    இதனை யடுத்து பொதுமக்கள் போலீசாரை தாக்குவதை நிறுத்தி உள்ளனர். இது குறித்து உடனடியாக குடியாத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து சென்ற குடியாத்தம் போலீசார் சரவணன் மற்றும் பெங்களூர் போலீசாரை அழைத்துக் கொண்டு குடியாத்தம் காவல் நிலையத்திற்கு வந்தனர்.

    அவர்களிடம் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி விசாரணை நடத்தியதில் சரவணன் மற்றும் அவரது மனைவி ஜெயப்பிரியா உறவினர்கள் மீது எலங்கா டவுன் போலீஸில் வழக்கு பதிவு செய்திருப்பது தெரியவந்தது.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சரவணன் கைது செய்ய எலங்கா டவுன் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ஸ்ரீ சில் மற்றும் இரண்டு போலீசார் உடன் வந்தது தெரிய வந்தது இதனை தொடர்ந்து நேற்று மாலையில் ஓட்டல் அதிபர் சரவணனை பெங்களூர் போலீசார் கைது செய்து பெங்களூர் அழைத்துச் சென்றனர்.

    ×