என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "20 cows died"

    • கால்நடைகளுக்கு மர்ம நோய் பாதித்து வருகிறது என கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை.
    • பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் ஹைவேவிஸ் பேரூராட்சியில் மேகமலை, மணலாறு, மேல் மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராஜா மெட்டு, ஹைவேவிஸ் என மொத்தம் 7 மழை கிராமங்கள் உள்ளன. இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் தேயிலை தோட்டங்களில் கூலி வேலை பார்த்து வருகின்றனர். மேலும் வீடுகளில் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக குடியிருப்பு பகுதிகளில் வளர்க்கப்படும் பசு மாடுகள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து இறந்து வருகின்றன. இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், கால்நடைகளுக்கு கடந்த சில நாட்களாக மர்ம நோய் பாதித்து வருகிறது. இது குறித்து கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    தினந்தோறும் வீடுகளில் இறந்து வரும் பசு மாட்டை உள்ளூர் இளைஞர்கள் மலைப்பகுதிக்கு எடுத்துச் சென்று புதைத்து வருகின்றனர். இதனால் வனப்பகுதியில் உள்ள யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட விலங்குகளுக்கும் இந்த நோய் தாக்கும் அபாயம் உள்ளது.

    இது வரை 20க்கும் மேற்பட்ட பசு மாடுகள் பலியாகியுள்ளது. எனவே கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இறந்த பசுமாடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    ×